‘அம்னோ உறுப்பினர்கள் பணக்காரர்கள் என்கிறார்களா? கவலையே வேண்டாம்’

1 assemblyஅம்னோ உறுப்பினர்கள் செல்வச் செழிப்பில் திளைப்பது பற்றி சங்கடப்படக்கூடாது.  அது,  அவர்களின்  வெற்றிக்கும் திறமைக்கும்  ஓர் அடையாளம்.  அம்னோ இளைஞர் பேரவையில்  ஜோகூர் பேராளர் கைருல் அன்வார் ரஹ்மாட் இவ்வாறு கூறினார்.

“பணக்காரர்கள்”  என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அம்னோ உறுப்பினர்கள்  “வருத்தப்படவே” கூடாது என்றாரவர்.

“இளைஞர்  தலைவர் (கைரி ஜமாலுடின்) போல்  லேண்ட் ரோவர் அல்லது போர்சே வைத்திருக்கிறீர்களா. கவலையே வேண்டாம்.

“அது, உங்களிடம் அதற்கான தகுதியும்  எதையும் செய்யும் திறமையும்   பொருளாதாரம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையும் காண்பிக்கிறது”,  என்றாரவர்.