குகன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு

kuganபோலீசும் அரசாங்கமும், போலீஸ் காவலில் இருந்த ஏ.குகன் இறந்ததற்கு அவர்களே பொறுப்பு என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கெதிராக மட்டுமல்லாமல் குகனின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுக்கு எதிராகவும் மேல்முறையீடு செய்துகொண்டுள்ளன.

1956 சிவில் சட்டத்தின்படி குகனின் குடும்பத்துகான இழப்பீடு ஒரு வரம்பு உட்பட்டது என்றும் ஆனால், நீதிமன்றம் அதை மீறிவிட்டது என்றும் அவர்கள் முறையீட்டு மனுவில் குறிப்பிட்டனர்.

குகனின் தாயார், சுபாங் ஜெயா ஓசிபிடி, கான்ஸ்டபிள் நவீந்திரன், அப்போதைய சிலாங்கூர் போலீஸ் தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ், அரசாங்கம் ஆகியோருக்கு எதிராக இழப்பீடு கேட்டுத் தொடுத்திருந்த வழக்கில் நீதிபதி வி. டி. சிங்கம் மொத்தம் ரிம801,700 வழங்க உத்தரவிட்டார்.