குழாயில் நீர் வராததால் ஆத்திரமடைந்துள்ளனர் பலாக்கோங் மக்கள்

1 protestபத்து  நாள்களாகக்  குழாயில்  நீர்  வரும்  வருமென்று  எதிர்பார்த்து  ஏமாந்துபோன  சிலாங்கூர்,  பலாக்கோங்  குடியிறுப்பாளர்கள், நேற்று  தங்கள்  ஆத்திரத்தை  ஒரு  கண்டனக்  கூட்டம்  நடத்தி  வெளிப்படுத்திக்  கொண்டனர்.

தங்கள்  பகுதிக்குக்  குழாய்நீர்  வந்து  சேரும்  வரையில்  ஒவ்வொரு  மாலையும்  கண்டனக் கூட்டம்  நடத்தப்போவதாகவும்  அவர்கள்  சூளுரைத்தனர்.

1 protest1நேற்றைய  கண்டனக்  கூட்டத்தில்,  தாமான்  இம்பியான்  ஏசான்,  தாமான்  இம்பியான்  இண்டா,  கம்போங்  கினாங்கான் இண்டா  ஆகியவற்றைச்  சேர்ந்த  சுமார்  40  குடியிருப்பாளர்கள்  கலந்துகொண்டனர்.

அவர்களின்  பேச்சாளரான  பால்  வோங்,  நீர்விநியோக  தடைக்கான  காரணத்தையும்  அது  பற்றி  மக்களுக்குத்  தெரிவிக்கப்படாததும்  ஏன்  என  ஷபாஸ்  விளக்கமளிக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.