செம்பனைத் தோட்டத் தொழிலாளர்களில் 77 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்

1 oilசெம்பனைத்  தோட்டங்களில்  வேலை  செய்யும் 442,094  தொழிலாளர்களில்  77  விழுக்காட்டினர்  அந்நியர்.

இதனைத்  தெரிவித்த  தோட்டத்  தொழில்  மூலப்பொருள்  அமைச்சர்  டக்லஸ்  உக்கா எம்பா,  இது  செம்பனைத்  துறை  அந்நிய  தொழிலாளர்களையே  அதிகம்  நம்பி  இருப்பதைக்  காண்பிக்கிறது  என்றார்.

இப்பிரச்னைக்குத்  தீர்வுகாண  அத்துறையில்  உள்ளூர்  மக்களைக்  குறிப்பாக  இளைஞர்களைப்  பயிற்றுவிக்க  அமைச்சு  திட்டமிட்டிருப்பதாக  அவர்  தெரிவித்தார்.

“உள்ளூர்  மனிதவளத்தைப் பயன்படுத்துவதன்வழி  அந்நிய  தொழிலாளர்களைச்  சார்ந்திருக்கும்  நிலையைக்  குறைக்க  முடியும்.  அமைச்சு  அதிகமான  உள்ளூர்  இளைஞர்களுக்கு  இத்துறையில்  பயிற்சி  அளிக்கும்”,என  ரொம்பின்,  கெராதோங்கில்  மலேசிய  செம்பனை தொழில்  பயிற்சி  மையத்தில்  நடைபெற்ற  ஒரு  நிகழ்வில்  அமைச்சர்  கூறினார்.