சீன நாட்டுச் சுற்றுப்பயணி சாபாவில் கடத்தப்பட்டார்

kidnapசாபாவில், சீன நாட்டுச்  சுற்றுப்பயணி  ஒருவரையும்  தங்குவிடுதி  பணியாளர்  ஒருவரையும்  ஆயுதமேந்திய  நபர்கள்  கடத்திச்  சென்றனர்.

இச்சம்பவம்  நேற்றிரவு  சிங்காமாதா  ரீப்  ரிசோர்டில்  நிகழ்ந்ததாக  சைனா  மெட்ரோபோலிஸ்  டெய்லி  அறிவித்துள்ளது.

நேற்றிரவு  சுமார்  10.30க்கு  ஆயுதமேந்திய  ஐந்து, ஆறு  ஆள்கள்  தங்குவிடுதிக்குள்  புகுந்து  இந்தக் கடத்தலை  நடத்திவிட்டு  சில  நிமிடங்களில்  ஒரு  படகில்  தப்பிச்  சென்றதாக  தங்குவிடுதி  நிர்வாகி  கூறியதாக  அச்செய்தித்தாள்  கூறிற்று.