சிறைச்சாலை அதிகாரத்தினருக்கு எதிராக உதயா சட்ட நடவடிக்கை எடுக்கிறாரர்

 

Uthaya - prison authoritiesமனித உரிமை கட்சியின் தலைவர் பி. உதயகுமார் காஜாங் சிறைச்சாலையின் இயக்குனர் மற்றும் இதர இரு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவர் இதற்கான மனுவை நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.uthaya அம்மனுவில் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் ஹுசின் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அவரை அவரது வழக்குரைஞர்கள் சந்திக்க அனுமதி வழங்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை சிறைச்சாலை அதிகாரத்தினர் பின்பற்றவில்லை என்று உதயகுமார் கூறியுள்ளார்.

அம்மனுவில் காஜாங் சிறைச்சாலை இயக்குனர் அப்துல் வஹாப் அப்துல் காசிம், இன்ஸ்பெக்டர் ஸாஜிடே சாமின் மற்றும் மெக்கென்சி என்று மட்டும் கூறப்பட்டுள்ள இன்னொரு இன்ஸ்பெக்டர் ஆகியோரை உதயகுமார் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

 

TAGS: