ராம் கர்பாலுக்கு இடம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை எனக் குடும்பத்தார் மறுப்பு

ramபுக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில்  கர்பால்  சிங்கின் புதல்வரும்  வழக்குரைஞருமான  ராம்  கர்பாலைக்  களமிறக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும்  விண்ணப்பத்துக்கும்  தங்களுக்கும்  தொடர்பில்லை  என்று  அவரின்   குடும்பத்தினர்  கூறுகின்றனர்.

ராம்  கர்பாலுக்கு  ஆதரவாக  நடைபெறும்  கையெழுத்து  திரட்டும்  இயக்கத்தில்  தங்களுக்கு  சம்பந்தமில்லை  என டத்தோ  கிராமாட்  சட்டமன்ற  உறுப்பினர்  ஜகதீப்  சிங் டியோ கூறினார்.

“அது  ராம்  கர்பாலை  புக்கிட்  குளுகோர்  வேட்பாளராக பார்க்க  விரும்பும்  பொதுமக்களின்  வேலையாக  இருக்கலாம்.  எங்கள்  குடும்பத்துக்கும்  அதற்கும்  சம்பந்தமில்லை”,  என்று  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்