எம்எச்370: தேடும்பணி அடுத்த கட்டத்துக்குச் செல்வதாக ஆசி பிரதமர் அறிவிப்பு

abbotகாணாமல்  போன  மலேசிய  விமானத்தின் உடைந்த  பகுதிகள் மிதப்பதைக்  கண்டுபிடிக்கும்  வாய்ப்பு  குறைந்துகொண்டே  வருகின்ற  நிலையில் அடுத்த  கட்டமாக  இந்தியப்  பெருங்கடலின்  அடியில்  முன்னிலும்  பரந்த  பகுதியில்  தேடிப்பார்ப்பதற்கு  கவனம்  செலுத்தப்படும். ஆஸ்திரேலியப்  பிரதமர்  டோனி  அப்பட்  இன்று  இதனைத்  தெரிவித்தார்.

அதிநவீன  கருவிகளைக்  கொண்ட  கடலடிச்  சாதனங்களின்  உதவியுடன்  கடலடியில்  தேடும்  நடவடிக்கை  தொடரும்.

காணாமல்போன  விமானத்தின்  பகுதிகள்  எதுவுமே  கிடைக்காமல்  போகும்  சாத்தியம்  இருப்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார்.

“இந்த  மர்மத்துக்கு  முடிவுகாண  எங்களால்  இயன்ற  அனைத்தையும்  செய்வோம்”,  என  கேன்பெராவில்  அப்பட்  கூறினார்.