ஜிஎஸ்டி-யை எதிர்க்கும் அரசுப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்: அரசாங்கம் எச்சரிக்கை

aliநேற்று பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)-எதிர்ப்புப்  பேரணியில் கலந்துகொண்ட  அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராக  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனத்  தலைமைச்  செயலாளர்  அலி  ஹம்சா எச்சரித்துள்ளார்.  அவர்கள் பணிநீக்கம்  செய்யப்படும்  அபாயமும்  உள்ளது.

அரசுப்  பணியாளர்கள்  அரசாங்கத்தின்  கொள்கைகளையும்  திட்டங்களையும்  ஆதரிக்க  வேண்டுமே  தவிர  எதிர்க்கக்  கூடாது  என்றாரவர்.

“அவர்கள்  கலந்துகொண்டதற்கான  உறுதியான  ஆதாரங்கள்  இருக்கும்  பட்சத்தில்  அவர்களுக்கு  எதிராகக்  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்”,  என்றாரவர்.