ரிம100 மில்லியன் சலுகைக் கடனுதவித் திட்டம் எங்கே?

khoo2014 பட்ஜெட்டில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  இரவுநேரச்  சந்தை   வியாபாரிகளின்  சலுகைக்  கடனுதவித் திட்டத்துக்கு ரிம100 மில்லியன்  ஒதுக்கப்படும்  என வாக்குறுதி  அளித்திருந்தார்.  ஆனால், அப்படி  ஒதுக்கப்பட்ட  பணம்  எங்கிருக்கிறது  என்பதுதான்  தெரியவில்லை  என  டிஏபி-இன்  ஆயர் குரோ  சட்டமன்ற  உறுப்பினர்  கூ  போய்  தியோங்  கூறினார்.

“கடந்த  ஆண்டு  டிசம்பரில்  பட்ஜெட்  ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து  இன்றுவரை  அத்திட்டம்  தொடங்கப்படாதிருக்கிறது.

“பிஎஸ்என்(பேங்க்  சிம்பானான்  நேசனல்)-னைக்  கேட்டால்  பணம்  வந்துசேரவில்லை,  அதனால்  கடனளிக்கும்  திட்டத்தைத் தொடங்கவில்லை  என்கிறது”, என அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அப்படியானால்  வாக்களிப்பட்ட  ரிம100 மில்லியன்  எங்கு  போனது? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில்  இதுவும்  ஒன்றா?”,  என்று  கூ  வினவினார்.