அன்வார்: இஸ்லாமிய சமய அதிகாரிகள் ‘அதிகார ஆணவம் நிறைந்தவர்கள்’

anசிலாங்கூரிலும்  பினாங்கிலும்  சமய  அதிகாரிகள்  அதிகார  ஆணவத்துடன்  நடந்துகொண்டிருப்பதாக  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  குறைகூறினார்.

“மற்ற இனத்தாரை இழிவுபடுத்துவதுபோன்ற  தோற்றத்தை  உருவாக்க  வேண்டாம்”,  என்றவர்  எச்சரித்தார்.

சிலாங்கூர்  இஸ்லாமிய  துறை (ஜாயிஸ்) இந்து திருமணம்  ஒன்றைத்  தடுத்து  நிறுத்திய  சம்பவம்  பற்றியும்  பினாங்கில்  சமய  அதிகாரிகள்,  மதமாறிய  சீனர்  ஒருவர்  சீனர்  வழக்கப்படி  அடக்கம்  செய்யப்படுவதைத்  தடுத்து  நிறுத்தியதைப்  பற்றியும்  கருத்துரைத்தபோது  அன்வார்  இவ்வாறு  கூறினார்.