தலைமை நீதிபதி: குழந்தை பராமரிப்பு சர்ச்சைக்குத் தீர்வுகள் உண்டு ஆனால்…..

cjபெற்றோரில்  ஒருவர்  மதமாறும்போது  குழந்தைகளைப்  பராமரிக்கும்  உரிமை யாருக்கு  என்ற  சர்ச்சைக்குத்  தீர்வுகாண  வழி  உண்டு  என்கிறார்  தலைமை  நீதிபதி  அரிபின்  ஜக்கரியா.

ஆனால்,  அதைத்  தெரிவிக்க  அவர்  தயாராக  இல்லை.

“வழிமுறைகளைச்  சொல்ல என்னால்  முடியாது. அப்படிச்  செய்தால்  நான்  ஆலோசனை  வழங்குவதாகக்  கருதப்படும்”, என்றவர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

“சம்பந்தப்பட்ட  தரப்பினர்  அவர்களின்  உரிமைகளுக்காக  போராடலாம். ஒருவர் (சிவில்  நீதிமன்ற ஆணைக்கு) கீழ்ப்படியவில்லை  என்கிறபோது  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படலாம்”என அரிபின்  குறிப்பிட்டார்.