அன்வார்: பக்காத்தான் உடையும் அறிகுறி எதுவுமில்லை

anwarஅப்துல்  காலிட்  இப்ராகிமை சிலாங்கூர் மந்திரி  புசார்  பதவியிலிருந்து  அகற்றுவதற்கு  பாஸ்  எதிர்ப்புத்  தெரிவிப்பதால்  பக்காத்தான்  ரக்யாட்  உடையும்  என்று  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  நம்பவில்லை.

அதற்கான அறிகுறி  எதுவும்  இல்லை  என்று  கூறிய  அவர்,  அவ்விவகாரத்தில்  பக்காத்தானுக்குள்  கருத்துவேறுபாடு  இருப்பதை ஒப்புக்கொண்டார்.

அடிநிலை  தலைவர்கள்  சிலர்  மாறுபட்ட  கருத்துகளைச்  சொன்னாலும்  தங்களுக்கு  பக்காத்தான்  தலைமைத்துவக்  கொள்கைகளில்  முழு நம்பிக்கை  உண்டு  என்றாரவர்.

“டிஏபி,  பாஸ்,  பிகேஆர்  தலைவர்கள்  கூட்டுறவின்  அவசியத்தை  உணர்ந்து   தங்களுக்கிடையில் ஒத்துழைப்பை மேலும்  வலுப்படுத்திக்கொள்வார்கள்  என்று  நம்புகிறேன்”, என  அன்வார்  கூறினார்.