கருத்துக்கணிப்பு: வான் அசிசா எம்பி ஆவதே பெரும்பாலோர் விருப்பம்

surveyசிலாங்கூரின்  அடுத்த  மந்திரி  புசாராவதற்கான  தகுதியான  வேட்பாளர்  பிகேஆர்  தலைவர் டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்தான்  என்பது  பெரும்பாலோர்  விருப்பமாக  இருப்பது  மெர்டேகா  மையம்  மேற்கொண்ட  கருத்துக் கணிப்பு  ஒன்றில்  தெரிய  வந்துள்ளது.

மாற்று  வேட்பாளராகக்  குறிப்பிடப்பட்டிருக்கும்  அஸ்மின்  அலிக்கு  அவ்வளவாக  வரவேற்பு  இல்லை. ஆறு  விழுக்காட்டினரே  அவர்  எம்பி  ஆவதை  விரும்புகிறார்கள். அதேவேளை,  பாஸ்  கட்சியைச்  சேர்ந்த  ஒருவர்  எம்பி  ஆவதை  12 விழுக்காட்டினர்  ஆதரிக்கின்றனர்.

அவர்கள்  இருவருடனும்  ஒப்பிடும்போது,  15 விழுக்காட்டினர்  அம்னோவைச்  சேர்ந்த  ஒருவர்  எம்பி  ஆவதை  விரும்புகிறார்கள்  என்பது  சுவையான  விசயம்.

கருத்துக்கணிப்புக்காக  மெர்டேகா  மையம்  808  பேரைச்  சந்தித்தது.  அவர்களில்  25 விழுக்காட்டினர்  வான்  அசிசா  எம்பி  ஆவதை  ஆதரித்தனர்.

ஆனால், பெரும்பாலோருக்கு,  32  விழுக்காட்டினருக்கு  என்ன  சொல்வதென்றே தெரியவில்லை.