நாடாளுமன்ற உறுப்பியம் பெறாதவர்கள் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்களாக நியமனம் பெற்ற வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது

 

Low1நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படாத மற்றும்/அல்லது நியமிக்கப்பட்டாத நபர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் தொடுத்திருந்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்விவகாரத்தை தாம் பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் போவதாக குலா தெரிவித்தார்.

அமைச்சர்கள் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லவ் மற்றும் துணை அமைச்சர்கள் லோக பால மோகன் மற்றும் அஹமட் பாஷா முகமட் ஹனிபா ஆகியோரின் நியமனம் அரசமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரமாகும் என்று குலா இந்த வழக்கின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

தேவான் ரக்யாட் மற்றும் தேவான் நெகாரா ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்தின் விதிகளாகும்.

“அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 43(2)(b) மற்றும் 43 A(1) இதற்கு வகை செய்கின்றன.

மே 5, 2013 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்த நால்வரும் போட்டியிடவில்லை. மே15 இல் அவர்கள் அமைச்சர்களாகவும் துணை kulaஅமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர் (செனட்டர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவதற்கு முன்னதாக).

“மே 15 இல் அவர்கள் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒன்றில் உறுப்பினர்களாக இல்லை ஏனென்றால் அவர்களுக்கு அதுவரையில் பதவிப் பிரமாணம் செய்யப்படவில்லை. ஆகவே, அவர்களது நியமனம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று எனது வழக்குரைஞர்கள் வாதாடினார்.

“இங்கிருந்து, நான் பெடரல் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போகிறேன், ஏனென்றால் இது அரசமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரமாகும்”, என்று குலா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நீதிபதிகள் லிண்டன் அல்பர்ட், ரோஹானா யூசுப் மற்றும் வெரோன் ஓங் லாம் கியட் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டை செவிமடுத்து தள்ளுபடி செய்தது.