அஸ்மின் மந்திரி புசார் நியமனக் கடிதம் பெற்றார்

Azmin at palace1சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை அவர் சிலாங்கூர் அரண்மனையிலிருந்து பெற்றுக் கொண்டார்.

இன்று மாலை அக்கடிதம் பெறப்பட்டது. சிலாங்கூர் மாநில புக்கிட் அந்தாரா சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி நாளை காலையில் பதவிப் பிரமாணம் எடுப்பார் என்றுAzmin appointment letter எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாகினி தொடர்பு கொண்ட போது இதனை சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி ஒப்புக் கொண்டார்.

அஸ்மின் தற்போது பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் கட்சி தலைவர் டாக்டர் வான் அஸிசா ஆகியோருடன் ஒரு கூட்டத்தில் இருக்கிறார்.

பிகேஆர் தலைமையகத்தில் ஊடகக் குழுவினர் குவிந்துள்ளனர். அங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்வாரும் அஸிசாவும் அஸ்மின் அலியின் நியமனத்தை ஏற்றுக் கொண்டு இந்த இழுபறியை ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்களா என்ற கேள்வி இருக்கிறது.

மேலும், இந்த அரசியல் தலைவர்கள் தங்களின் பதவிப் போராட்டங்களில் இனிமேலும் அவர்களுக்கு வாக்களித்த மக்களை முட்டாள்களாக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைளை மக்கள் முன்னெடுக்க வேண்டும்.

அஸ்மின், அன்வார் மற்றும் அஸிசா ஆகியோருக்களுக்கிடையிலான கூட்டம் மாலை மணி 7.30 க்கு முடிவுற்றது. பின்னர், அன்வாரும் அஸிசாவும் அங்கிருந்து கிளம்பினர். அக்கூட்டம் பற்றி அன்வாரும் அஸ்மினும் மௌனம் காத்தனர். ஆனால், விளைவு “ஆக்கரமானது” என்று மட்டும் கூறிக்கொண்டு அன்வார் வெளியேறினார்.

அஸ்மின் இரவு மணி 8.00 க்கு ஒரு முழு அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.