ரிஸால்மானை அனுப்பி வைக்குமாறு நியு சிலாந்து கோரிக்கை

rizalபாலியல்  குற்றச்சாட்டை  எதிர்நோக்க  மலேசிய  தூதரக  அதிகாரியான  முகம்மட்  ரிஸால்மான்  இஸ்மாயிலைத்  திருப்பி  அனுப்பி  வைக்குமாறு  நியு  சிலாந்து  அரசாங்கம்  அதிகாரப்பூர்வமாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஐந்து  மாதங்களுக்கு  முன்னர்,  முகம்மட்  ரிஸால்மான்,  நியு  சிலாந்தில்  ஒரு  பெண்ணிடம்  கொள்ளையிட்டதற்காகவும்  அவருடன்  பாலியல் வல்லுறவு  கொள்ள  முயன்றதற்காகவும்  கைது  செய்யப்பட்டார்  என்ற  செய்தி  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியது. அதன்பின்னர்  சில  அரசதந்திர  முயற்சிகளைத்  தொடர்ந்து  அவர் மலேசியா  திரும்ப  அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அதற்கு நியு  சிலாந்திலும்  மலேசியாவிலும்  பெரும்  எதிர்ப்பு  கிளம்பியது. அதனை  அடுத்து  அவரை  வெல்லிங்டனுக்கு  அனுப்பிவைக்க  மலேசியா  முன்வந்தது.