மலேசியாவில் பத்திரிகை சுதந்திரம் தாழ்ந்து போனதற்கு டிஏபிதான் காரணமாம். தகவல், பல்லூடக அமைச்சர் அஹமட் ஷப்ரி சிக் கூறுகிறார்.
இன்று நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது, இங்கா கோர் மிங் (டிஏபி- தைப்பிங்), எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் பத்திரிகைச் சுதந்திர தரவரிசைப் பட்டியலில் (பிஎப்ஐ) இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் மலேசியா 147-ஆவது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலடியாக அஹ்மட் ஷப்ரி, டிஏபி-யால் வழிநடத்தப்படும் பினாங்கு அரசு அதன் சட்டமன்றத்தில் செய்திகள் சேகரிப்பதற்கு உத்துசான் மலேசியாவுக்கு விதித்த தடைதான் அதற்குக் காரணம் என்றார்.
“பினாங்கு சட்டமன்ற நடப்புகள் பற்றி செய்தி சேகரிக்க உத்துசானுக்கு அனுமதி இல்லை. இங்கு (நாடாளுமன்றத்தில்) செய்தி சேகரிக்கக் கூடாது என எங்கள் (பிஎன்) அரசாங்கம் செய்தித்தாள்களை அல்லது மலேசியாகினியைத் தடுக்கிறதா…
“பினாங்குதான் ஊடகங்களுக்குத் தடை போடுகிறது…. பத்திரிகைச் சுதந்திரம் தாழ்ந்த இடத்தில் இருக்கிறதென்றால் அதற்கு (கூட்டரசு) அரசாங்கம்தான் பொறுப்பு என்றாகாது. பினாங்கு அரசு ஊடகங்களுக்கு தடை விதித்ததும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாகும்”, என்றார்.


























க க க நகைச்சுவையாக உள்ளது.
அரசாங்கத்தின் திறனில் லஞ்சத்தின் தரமே ஓங்கி வருகிறது. நல்லவை எல்லாம் தரமின்றியே காண்கிறது…
எதிர்கட்சியை மட்டும் குறை கூறினால் மட்டும் சரியாகி
விடுமா ,மலேசியாவில் உள்ள எல்லா பத்திரிகைகளும்
தரம் தாழ்ந்து போவதிற்கு அரசியல் கட்சிகள் தான் காரணம்
செய்தியை தாளில் அரசியல் இல்லாமல் எந்த பத்திரிகையும்
வருவதில்லை அதும் தமிழ் பத்திரிகைகள் எதாவது ஒரு அரசியல் தலைவர்களின் பிடியில் சிக்கி நாசமாகிக் கொண்டு
வருகிறது எல்லா பத்திரிகைகளை இழுத்து சாத்திவிட்டால்
அரசியல் வாதிகள் தற்கொலை செய்துக்கொள்வார்கள் . அமைச்சர் எல்லா பத்திரிக்கைகளை படிப்பது இல்லை அதனால் உளறுகிறார் உண்மை தெரியாமல் .
ஆனால் தர வரிசையில் பினாங்கு இடம் பெறவில்லையே! மலேசியா தானே இடம் பெறுகிறது!
எல்லாவற்றுக்கும் எதரி கட்சிதான் காரணம். என்னே அறிவிலிகள்? இப்படிப்பட்ட மடையர்கள் தான் ஆட்சியில் உட்கார்ந்து இருக்கின்றனர்.ஈன ஜென்மங்கள்.
எதிர்கட்சியின் மேல் பழி போடுவது உதட்டழகனின் இயலாமையையே காட்டுகிறது. பத்திரிகைகளின் வாயைப் பொத்தி, கையைக் கட்டிப் போடுவதை நிறுத்துங்கள், அவற்றுக்கு சுதந்திரம் கொடுங்கள். அவற்றின் தரம் தானே உயரும். ஆனால் செய்ய மாட்டீர்கள் காரணம் அப்படிச் செய்தால் அடுத்த 14-க்குப் பிறகு நீங்கள் அனைவரும் கூண்டோடு கைலாசம் தான்…
பகுத்தறிவு இல்லாத பராரிகள் அடுத்தவன் மீது பலி போட்டே தப்பித்து கொள்வான்கள் !
இவன் வாய திறந்தாலே கேன முட்டாள் மாதிரி தான் பேசுவான் .
இவன் வாயை பார்த்தாலே வாந்தி வருது ! இவன் பேசியது வார்த்தையா வாந்தியா ?