பெங் ஹோக்-கின் மரண விசாரணையைக் கமுக்கமாக நடத்த வேண்டிய அவசியமில்லை

teohடிஏபி  அரசியல்   உதவியாளரான  தியோ  பெங்  ஹோக்கின் மரணத்துக்கான  காரணத்தைக்  கண்டறிய  போலீசார்  மேற்கொண்டிருக்கும்  புலனாய்வைக்  கமுக்கமாக  நடத்த  வேண்டியதில்லை.

சிரம்பான்  எம்பி,  தியோ  கொக்  சியோங்குக்கு  அளித்த எழுத்து  வடிவிலான  பதிலில்  உள்துறை  அமைச்சு  அவ்விசாரணையின்  நிலையைத்  தெரிவிக்க இயலாது  என்று  கூறியதை  அடுத்து இவ்வாறு  கூறப்பட்டது.

“விசாரணை  நிலவரத்தை  அமைச்சு அவ்வப்போது  தெரியப்படுத்திக்கொண்டே  இருக்க  வேண்டும்.

“விசாரணைக்கு   இடையூறாகும்  எனத்  தகவலளிக்க மறுப்பது  சரியான  காரணமாகாது.  வெளிப்படையான  விசாரணை  நடப்பதையே  நாங்கள்  விரும்புகிறோம்”, என  தியோ  நாடாளுமன்ற   வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.