உலகம் மூன்று நாள்களுக்கு இருளில் மூழ்கும் என்பது வெறும் புருடா

solarடிசம்பர்   மாதம்  உலகில்  மூன்று  நாள்களுக்கு  இருள்  சூழ்ந்திருக்கும்  என்ற  செய்தி வெறும்  புருடா  என்றும்  அதை  நம்ப  வேண்டாம்  என்றும்  தேசிய  பரவெளி  நிறுவனம்(அங்காசா)  ஓர்  அறிக்கையில்  கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில்  வலம்  வந்த  அச்செய்தி  அமெரிக்க  வான், விண்வெளி  நிர்வாகத்தின்(நாசா)  தலைவர்  சார்ல்ஸ்  போல்டனை  மேற்கோள்  காட்டி  இருந்தது. ஆனால்,  நாசாவின்  வலைத்தளத்தில்  அப்படிப்பட்ட  செய்தி  எதுவும்  பதிவாகவில்லை.

டிசம்பர் 21-இலிருந்து 23-வரை  சூரியனில்  புயல்  வீசும்போது  பூமி  இருளில்  மூழ்கும்  என்பதை  நாசாவும்  உறுதிப்படுத்தி  யிருப்பதாக  அச்செய்தி  கூறிற்று.