சிலாங்கூர் மாநிலத்தில் பைபிள் விநியோகிப்படுவது பற்றிய சட்டவிதிகளை 30 பைபிள் பிரதிகளில் பதித்ததற்காக சிலாங்கூர் அதிகாரத்தினர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மலேசிய பைபிள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பக்கூடாது என்று சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலி முன்பே கூறியிருந்த போதிலும், அம்மாதிரியான முத்திரை பதிப்புகள் புனித நூலின் “புனிதத்தன்மையக் கெடுப்பதாகும்” என்று பிஎஸ்எம் தலைவர் இங் மூன் ஹிங் கூறினார்.
“முத்திரை பதிக்கப்பட்ட மற்றும் புனிதத்தன்மை கெடுக்கப்பட்ட பைபிள்கள் விநியோகிக்கப்படமாட்டது என்பதுடன் அவை பயன்படுத்தப்படமாட்டாது ஏனென்றால் அவை அரும் பொருட்காட்சிசாலைக்கு மட்டுமே ஏற்றதாகும்”, என்று அவர் கடும் வாசகம் அடங்கிய அறிக்கையில் கூறுகிறார்.


























புனிதம் என்றால் என்னவென்று புரியாத நர ஜென்மங்கள் அவர்கள். இறைவன் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன்.
மழை விட்டும் தூவானம் விடவில்லை.
இன்னும் உங்களுக்கு என்னதாண்டா வேணும்
அவன்களுக்கு நாமெல்லாம் முஸ்லிம் ஆக வேண்டுமாம்.
இறைவனால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
நரகத்திற்கு போக டிக்கெட் பண்ணியவர்கள்.
நம் நாட்டு மக்கள் அனைவரும் தத்தம் சமயத்தை துறந்து முஸ்லிம்களாக சமயம் மாறினால், எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடுமா? தீரவே தீராது. ஏன் அகிலமே ஒரே சமயமாக மாறினாலும் மாந்தரிடையே உள்ள வேறுபாடுகள் தீராது. ஏதாவது ஒரு வகையில் நான் அடுத்தவரிடமிருந்து மாறுபட்டு இருக்கவே விரும்புவர். வரலாறு முழுவதும் மனிதர் இப்படிதான் வாழ்ந்து வந்துள்ளனர். சமயங்களும் சமய நம்பிக்கைகளும் தோன்றும் முன்பே மனிதன் இப்படிதானே இருந்திருக்கிறான். வள்ளுவர் கூறுவது போல எதனை யார் கூறினால் என்ன? அதனில் உண்மையும் நன்மையையும் இருந்தால் ஏற்க ஏன் தயக்கம். வெவேறு சமய நம்பிக்கையுடைய விஞ்யானிகள் பலர் மக்கள் அனைவரின் நலனுக்காக வெவேறு கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து நாம் யாவரும் பயன்படுத்துகின்றோம். அதுபோல மனிதர் நலமாக வாழ வாழ்கை தத்துவங்களை கூறும்போது, அப்போதனை நமக்கு பயனளிக்கும் என்றால் அதனை ஏற்று கடைப்பிடிப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்? குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டிருக்க கூடாது. கொட்டங்கச்சியுனுள் வாழும் தவளையாகவும் இருக்ககூடாது. ‘கண்டதையும் கற்பவன் பண்டிதன் ஆவான்’ என்ற கூற்றுக்கேற்ப பல சமயங்களின் படிப்பினையை தெரிந்துகொள்வதால் நன்மைகள் பல.நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போல் எனக்கு தெரிந்ததுதான் உண்மை மற்றெல்லாம் (உண்மையாயிருந்தாலும்)பொய்யென்று கூறுவதை என்னவென்று கூறுவது? உலகம் ஆரம்பம் முதலே ஆக்கத்திற்கும் அழிவிற்கும் போட்டி, நன்மைக்கும் தீமைக்கும் போட்டி.ஆக்கம் அழிக்கப்பட்டாலும், தீமை பெருகினாலும், ஆக்கமும் நன்மையையும் தொடர்ந்து வலிமைபெற்றே வந்துள்ளன. அவர்களால் முத்திரையிடப்பட்ட 321 பிரதி பைபிள்களை நாமே அழித்துவிட்டு புதிய பிரதிகளை அச்சிடுவோம். யார் தடுக்க முடியும். அதுதான் இறைவனின் சித்தம் என்றால் மனிதர் யாம் என்ன செய்ய முடியும்? எத்தனை கோடி கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியுமா? அவர்கள் அறியாமல் செய்துவிட்டனர் அவர்களை நாம் மன்னிப்போம். அவர்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டால், இட்ட முத்திரைகள் தானாக மறைந்துவிடுமா? மன்னிப்பு கேட்பதற்கு, மன்னிப்பு வழங்குவதைவிட அதிக மன வலிமை வேண்டும். நாம் நமது நம்பிக்கையை வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது. அடுத்தவர் எந்த சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது நலனில் அக்கரைக்கொண்டு ஆயுள் முழுவது நலமாக வாழ இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.