மலேசியா உலகத்தினரால் குறைகூறப்படுவதை துணைப் பிரதமர் முகைதின் யாசினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், அவ்வாறே மலேசியா உலகத்தினரால் பாராட்டப்படுவதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
மலேசியா தேச நிந்தனைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் செய்திருந்த டிவிட்டர் செய்தி பற்றி முகைதின் யாசின் விடுத்திருந்த சீற்றமான எதிர்வினை பற்றி கருத்துரைத்த லிம் இவ்வாறு கூறினார்.
கடந்த செப்டெம்பரில் ஐநா பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் ஓபாமா பிரதமர் நஜிப்பை பாராட்டினார். இப்போது பைடென் கூறியது பற்றி குதிக்கும் முகைதின் அப்போது ஏன் ஒபாவிடம் “வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார்” என்று கூறவில்லை என்று அவர் வினவினார்.
“மலேசியாவுக்கு உமது பாராட்டு தேவையில்லை என்று அமெரிக்க அதிபரிடம் முகைதின் யாசின் கூறியிருக்க வேண்டும்”, என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
மலேசியாவின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஓபாமா தெரிவித்த பாராட்டால் பிரதமர் நஜிப் உண்மையிலேயே அவரது மனநிறைவை மகிழ்ச்சியுடன் வெளியிட்டார் என்று லிம் மேலும் கூறினார்.
நேற்று, பிடென் டிவிட்டர் பற்றி கருத்துரைத்த முகைதின் யாசின் வெளிநாட்டினர் நாட்டின் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று கூறியிருந்தார்.


























‘வேண்டும் வேண்டாமை இலான்’ எம்பெருமான் சிவபெருமான். புகழ்ச்சி வேண்டும் என்பான், இகழ்ச்சி வேண்டாம் என்பான் இறைமையை அறியாத தற்குறி.
மொக்கைக்கு முக்கத்தான் தெரியும்…..!
வாயை திறந்திருந்தால், சொந்த காசில் தனக்கு தானே சூனியம் வச்ச கதையா போயிருக்கும்.
அமெரிக்கா ஏன் அடுத்த நாட்டு விசயத்தில் தலை இடனும்? புரியவில்லையே?அமெரிக்கர்களை (அரசாங்கம்) வீடவா உலகத்தில் மற்ற எங்கும் கடும் போக்காளர்கள் உண்டு?
இந்த சட்டம் சிங்கப்பூரில் கடுமையான முறையில் பயன் படுத்த படுகிறது, அதற்க்கு அமெரிக்கர்களும் அவர்களுடைய அடி வருடிகளும் அதற்க்கு எதிராக வாயை திறப்பது ஏனோ? கேள்வி படலம் ……
வாயை திறப்பது இல்லை ஏனோ?
அதற்க்கு எதிராக வாயை திறப்பது இல்லை ஏனோ?
அப்போது முகைதீனுக்கு மூடு வரவில்லை! இப்போது தான் வந்திருக்கிறது! விட்டுத் தள்ளுங்கள்!
ஆங்கிலம் தெரிந்தால் சொல்லிருப்பான், ஒபாமா கிட்ட u i go come ketupat lemang ஒன்னும் புரியாம ஒபாமா ok ஓகே சொல்லிருப்பான்
இன்டர்நேஷனல் food budu banyak sedap u eat ஒபாமா