அருள் கந்தா கந்தசாமி அரசாங்கத்திற்கு சொந்தமான 1மலேசியா டிவலப்மெண்ட் பெர்ஹாட்டின் (1எம்டிபி) புதிய தலைவராகவும் குழுமத்தின் செயல்முறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டிருப்பது ஊடகங்கள் மற்றும் தொழில் துறை ஆகியவற்றில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கந்தாவின் நியமனம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தோல்வி கண்ட வணிகங்களை மீண்டும் சிறப்பாக இயங்க வைக்கும் கலையில் அவர் ஒரு வல்லுனர் என்று வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
அவரின் சிறப்பான கல்வி தகுதி, லண்டன் மற்றும் அபுதாபி ஆகியவற்றின் நிதிச் சந்தையில் அவர் பெற்றிருந்த தனித்தகுதி அவரின் திறமைக்குச் சான்றாக இருக்கின்றன.
நாட்டின் எதிரணியினரும் கூட அவரது நியமனம் திறமையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று ஒப்புக்கொண்டனர். 1எம்டிபி நிருவாகத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பிகேஆரின் உதவித் தலைவர் ராபிஸி ரமலி போன்றவர்கள் கூட கந்தாவை அறிவுத் திறம் வாய்ந்தவர் என்றும் இணக்கமான தொடர்பாளர் என்றும் வர்ணித்தனர்.
ஆனால், இந்த உற்சாகமான வரவேற்புக்கிடையே மௌனமான முணுமுணுப்புகள் வலம்வரத் தொடங்கியுள்ளன. முணுமுணுப்புகளாக இருந்தாலும், அம்னோவை பொறுத்தவரையில் அவை முக்கியமானதாகத் தெரிகிறது.
அருள் கந்தா என்ற பெயருடன் அவரது நிழல்படம் வெளியானதும், பிரதமர் நஜிப்பின் சிந்தனையில் உருவான ஓர் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் பொறுப்பை ஒரு மலாய்க்காரர்-அல்லாதவரிடம் ஒப்படைப்பதா என்ற கேள்வி எழத் தொடங்கி விட்டது.
அதுவும், கந்தா என்பவர் பதவி விலகிவிட்ட முகமட் ஹாஸெம் அப்துல் ரஹ்மான் என்ற மலாய்க்கார தலைமை அதிகாரிக்கு மாற்றாக நியமிக்கப்படுவதா?
துணை நிதி அமைச்சர் அஹமட் மாஸ்லானும் அருள் கந்தாவும் சந்தித்த நிழல்படம் துணை அமைச்சரின் டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு இக்கவலையைத் தெளிவுபடுத்துகிறது.
அந்த டிவிட்டர் தலைப்பில், அம்னோவின் தகவல் பிரிவின் தலைவருமான அஹமட் மாஸ்லான் இன்று பின்னேரத்தில் தமது அலுவலகத்தில் தாம் கந்தாவை சந்தித்ததாக எழுதியுள்ளார்.
மேலும், 1எம்டிபியின் புதிய தலைவரின் வயது 38, அவர் கோலாலம்பூரை சேர்ந்தவர் என்று எழுதியிருந்த துணை அமைச்சர் இறுதியாக அவர் ஒரு முஸ்லிம் என்றும் எழுதியுள்ளார் (“beragama Islam”).
அருளின் சமயம் குறிப்பிடப்பட்டிருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்தது. அவருடைய சமயத்திற்கும் 1எம்டிபியை சீரமைக்க வேண்டிய பணிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், இப்பதிவு வணிகத்தை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.


























(1எம்டிபி)யின் இத்தகைய பதவியில் அமர்ந்து யார் வேண்டுமானாலும் 10. பில்லியன் கடன் நிதியை உலக நிதி நிறுவனங்களில் இருந்து பெற முடியும். அதுவும் ஐயா ஆனந்தா அவர்களின் IPP என்ற தனியார் மின்சார கடன் 8.5 பில்லியன் கட்ட வேண்டும் அல்லது share swap செய்து கடனை சரி செய்ய வேண்டும். இப்ப என்ற மின்சார விநியோக வாய்ப்பில் அதிக அதிஸ்டம் உள்ளது.
இங்கு IPO என்ற Public listings செய்யும் முறையில் 1MDM எதோ தவறு செய்தபடியால் தாமதம். IPO முறையாக செய்ய முடியாத அளவுக்கு முன்னாள் பொறுப்பாளர்கள் இருந்தால் அதை அவர்கள் திறமையை நாம் கேள்வி கேக்க அதிகாரிகளை மாற்ற இடம் உண்டு.
இங்கே USD debt பேப்பர் என்று சொலப்படும் கடன் Instrument எவ்வளவு என்று நமது நியூஸ் தகவல்கள் சொல்ல வில்லை . கூட்டிக கழித்து பார்த்தால். 1MDB கஜானா துணையுடன் எதையும் சமாளிக்கும். கண்டா அவர்கள் துபாயில் இருந்து வந்துள்ளதால் கடனால் கடனை வெல்ல முடியும். எல்லாம் சரியானதும் அப்புறம் புதுககதை சொல்லி ……. 1MDB வாழ்க ! SC கு தெரியாத வித்தையா பார்ப்போம்.
அருள் கந்தா கந்தசாமி —- எல்லாமே சுவாமி முருகனையே நினைவு படுத்துகிறது…. நல்லதே நடக்கட்டும் முருகா!!!!
நம் நாட்டில் எல்லாம் முடிந்த பின்புதான் தமிழனை தேடுவார்கள் போலும்… எல்லாம் சரியாகி விட்டதும் கந்தவின் நிலை ???/
நம் சமயத்தை கற்க, நிற்க, கற்பிக்க என்று இல்லாமல், தான் போன போக்கில் போனதால் இன்று அருள் கந்தா கந்தசாமியும் மாறிபோய் விட்டார். நாளை மோகனமான சாமியும் மாறி விடுவார். எல்லாம் தமிழரின் சமய நெறிகளை நாம் கற்காமல், அதன் வழி நிற்காமால், அந்த நல்ல சமயத்தை பிறருக்கு கற்பிக்காமலும் போனதால் வந்த செய்வினையே தமிழர் மதம் தொடர்ந்து மாறிச் சென்று கொண்டிருப்பது. இந்து தருமர் என்போருக்கெல்லாம் இது ஒரு சிறந்த பாடமாக அமையட்டும். தண்ணீரில் மூழ்கிய கப்பலை மாறிப்போன நம் ஆளு மீண்டும் மிதக்க வைக்கின்றாரா என்று பார்ப்போம்.
என்ன பொன், தங்கள் பெரிய தில்ல லங்க்கடி FINANCE கம்பெனி வைத்து , மூடு…விழ கண்ட ஜாம்பவான் போல தெரிகிறதே…….புட்டு புட்டு..வைப்பதை பார்த்தல் …பண்டு ரங்கா…..எல்லாம் வெளிச்சம் 30 வருசம் …..சிங்கை தமிழ் நாடு ஓட்டம்
திலிருந்து இவங்களின் மூளை முட்டியில் உள்ளது என்பது தெளிவாகிறது.
கந்தன் நெக்ஸ் ஹன்டி malai
வாங்கன…….வணக்ங்கான ……..?
பொன் வட்டிமுதலைங்க தோஸடுல
ஒரு சில ஆண்களுக்கு மதம் ஒரு சட்டை மாதிரி அதை எப்போது யாருக்காக மாற்றி கொள்வார்கள் என்று அவர்களுக்கேதெரியாது . எல்லாம் பதவி படுத்தும் பாடு . இவர் எந்த முருகனுக்கு பால் ஊற்றினார் . ஒரே ராத்திரியில் இவ்வளவு பெரிய பாராட்டையும் பெற்று அதே நேரத்தில் கல்லையும் போட்டுவிட்டாரே .
70 களில் விமான படைக்கு தேவைப்பட்ட விமானங்களையும் யந்திரங்களையும் சரிசெய்ய ஒரு அமைப்பை இரு இந்தியர்கள் அமைத்தார்கள் ஆனால் அமைத்த பின் இருவரும் காணாமல் போனார்கள் -அதற்க்கு ஒரு அறைவேக்காடு மலாஇக்காரனை தலைமையில் போட்டு இன்றுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஆனால் சிங்கப்பூரில் அதேபோன்று அமைப்பை அமைத்து இன்று அது எங்கோ போய்கொண்டிருக்கிறது. அதன் துணை அமைப்புகள் அமெக்காவிலும் இருக்கும் அளவுக்கு வெற்றி அடைந்துள்ளது. AIR ASIA விமானங்களும் அங்குதான் சரி செய்யப்பட்டு வந்தன. இன்று அந்த அமைப்பு பலமடங்கு பெரிதாகி செயல் பட்டு வருகிறது. ஆனால் நம்முடைய அமைப்பு அப்படியே இருக்கின்றது.
அருள் முஸ்லிம் ஆக மதம் மாறி இருந்தால் பதவிக்காகவும் பெண்களுக்காகவும் தங்களின் பெற்றோர்களை மதியாதவன்களின் பட்டியலில் சேர்க்கவேண்டியதுதான். ஈன ஜென்மங்கள்
நாம் தெருக்கு தெரு,வீட்டுக்கு வீடு கோயில் கட்டி பூஜை, புனஸ்காரம் திருவிழா என கூத்தடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது மதத்தைச் சேர்ந்த பலர் யாருக்கும் தெரியாமல் மற்ற மதத்திற்கு தினமும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். பணத்திற்காக, பெண் சுகத்திற்காக, நோயிலிருந்து விடுபடுவதற்காக, மன நிம்மதிக்காக, பெரிய பதவிகளைப் பெறுவதற்காக என பல காரணங்களுக்காக இந்துக்கள் மதம் மாறுவது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதைப் பற்றி கவலைப்படாமல் கண்ணாடி கோயில், கருங்கல் கோயில், ஐந்து கோபுர கோயில் என கோடிக்கணக்கில் செலவு செய்து கோயில்களைக் கட்டி ஆண்டவன் சன்னிதானத்தை சுற்றுலா மையமாக்கி கொண்டிருக்கிறோம்.