தந்தை: ஏன் கொல்லப்பட்டார்? இக்கேள்விக்கு விடையில்லையே!

dad“என்  மகள்  எதற்காகக்  கொல்லப்பட்டாள்?”
அக்கொலைக்காக  கூட்டரசு  நீதிமன்றம் இரு  போலீஸ்காரர்களுக்கு  மரண தண்டனை  விதித்துத்  தீர்ப்புக்  கூறியிருந்தாலும்  இந்தக்  கேள்விக்கு  விடைதெரியாமல்  தவிக்கிறார்  ஸ்டீவ்  ஷரீபு.

கொலையாளிகள்  இருவரும்  செய்த  குற்றத்துக்காக  தூக்கில்  தொங்கப்  போகிறார்கள்  என்பதை அறிந்து  தம்  துணைவியாரும்  அல்டான்துன்யாவின்  மகன்கள் இருவரும் ஒரளவு  திருப்தி  கொண்டிருப்பதாக  அவர்  தெரிவித்தார்.

“ஆக, வழக்கு  முடிவுக்கு  வந்து  விட்டது. இனி, நான் மலேசிய  அரசாங்கத்தின்மீதும்  அவரின் மரணத்துக்குக்  காரணமான  அவ்விரு  அதிகாரிகளின்மீதும்,  அல்டான்துன்யா  மரணத்தின்போது  அவர்கள்  அரசாங்க  அதிகாரிகள்தானே  அவர்கள்மீதும்   சிவில்  வழக்கைத்  தொடரலாம்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ஆனாலும், 2006, அக்டோபர்  19-இல்,  ஷா ஆலம்  புஞ்சாக்  ஆலமில்  ஒரு  காட்டுப்  பகுதியில்  அல்டான்துன்யா கொல்லப்பட்டதற்கு, வெடிமருதுகளால் அவரது  உடல்  சிதறடிக்கப்பட்டதற்கான  நோக்கம்  என்ன  என்ற  கேள்வியைத்  திரும்பத்  திரும்பக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்  ஸ்டீவ்.