அல்டான்துன்யாவின் கொலையாளிகளைச் சந்தியுங்கள்

sirul, hadriஅப்பாடா, ஒரு  வழியாக  அல்டான்துன்யாவின்  கொலையாளிகளின்  முகங்களைப்  பார்க்கும்  வாய்ப்பு  கிடைத்துள்ளது.

மங்கோலியப்  பெண்ணின்  மரணம்தான்  பெரும்  மர்மமாக  இருந்தது  என்றால்  கொலையாளிகள்  எனக்  குற்றம்  சாட்டப்பட்ட  இரு  போலீஸ்காரர்களும்  மர்ம  மனிதர்களாக  நீதிமன்றத்துக்கு  வந்து  போய்க்  கொண்டிருந்தார்கள். வழக்கு  தொடங்கியதிலிருந்து  அவர்கள்  ஊடகங்களுக்கு  முகம்  காட்டியதில்லை.

இப்போது  முன்னாள்  தலைமை  இன்ஸ்பெக்டர்  அசிலா  ஹட்ரி, கார்ப்பரல்  சிருல்  அஸ்ஹார்  உமர்  ஆகியோரின்  உருவப்  படங்கள்  கிடைத்துள்ளன. புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்துக்கு  நன்றி.

ஆனாலும், அல்டான்துன்யா  மரணத்தில்  இன்னும்  ஒரு  மர்மம்  நீடிக்கிறது. அவரைக்  கொல்ல  வேண்டிய  நோக்கம்  என்ன?  இதற்கு இதுவரை  விடை  இல்லை.