பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிக்கன நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அரசாங்க ஜெட் விமானங்களை விற்று விடலாம் என பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கூறினார்.
ரிம400 மில்லியனை மிச்சப்படுத்த தேசிய பயிற்சித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக நஜிப் இன்று காலை அறிவித்ததற்கு எதிர்வினையாக பிகேஆர் உதவித் தலைவர் இவ்வாறு கூறினார்.
“ரிம400 மில்லியன் சிறிய தொகைதான். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ரிம400 மில்லியன் என்பது இரண்டு ஜெட் விமானங்களின் விலைதான்.
“ரிம400 மில்லியனுக்கு அவர் இரண்டு ஜெட் விமானங்களை விற்றுவிடலாம்”, என்று ரபிஸி கூறினார்.
நஜிப் வழக்கமாக அரச மலேசிய ஆகாயப்படையின் ஏர்பஸ் ஏசிஜே319-இல்தான் பயணம் செய்வார்.
இது தவிர அரசாங்கத்திடம் வேறு மூன்று ஜெட் விமானங்கள், ஒரு போயிங் பிசினஸ் ஜெட், பொம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ், டஸ்ஸால்ட் ஃபால்கன் 900 ஆகியவையும் உள்ளன.


























அப்ப எப்படி இளவ் ஊர் சுத்த முடியும்
நமது இந்திய சமூகத்திலும் நிறை திடீர் இளம் தொழிலதிபர்கள் தோன்றி டத்தோ, டத்தோஸ்ரீ பட்டத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர். ஒரு வேளை அந்த விமானம் விற்பனைக்கு வந்தால் அவர்களில் ஒருவர் அதனை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
நல்ல யோசனை. சிக்கனம் என்று பேச ஆரம்பித்து விட்டோம். அப்புறம் என்ன? மக்கள் நலன் தானே முக்கியம்.
இவன்களின் உல்லாசத்திற்கு மக்களின் வரிப்பணம் கோடிகணக்கில் செலவு செய்யப்படுகிறது. இதை எல்லாம் கேட்க நாதி இல்லை. உண்மையிலேயே யுத்தம் வந்தால் மலேசியா விமான படையின் திறன் சந்தேகமே. அத்துடன் அவசியமான விமானங்களின் நிலை என்ன என்பது யாருக்கு தெரியும்.
நல்ல யோசனை
தான் செயலாமே .
ரோசம்மாவின் Handbags களை விற்றாலே 400 மில்லியன் தேறுமே!
பிரதமனின் வங்கியை சோதித்தால் தெரியும்–சுவிஸ் வங்கியை. நீர்மூழ்கியை வாங்க எவ்வளவு கையூட்டு?
அது மட்டுமா? எல்லா தளவாடங்களுக்கும் எத்தனை கையூட்டு?
விமானங்கள்?
இது வெறும் நெத்திலி வாங்கிய கணக்குதான்,
இன்னும் திமிங்கலத்தை வாங்கிய கணக்கெல்லாம் காட்டவில்லையே ?