மஇகா-வின் புதிய நியமனங்களை ஏற்பதற்கில்லை- ஆர்ஓஎஸ்

micமஇகா  மறுதேர்தல்  விவகாரத்துக்குத்  தீர்வு  காணாதவரை  அக்கட்சித்  தலைவர்  ஜி.பழனிவேல்  செய்துள்ள  புதிய  நியமனங்களை  ஏற்பதற்கில்லை  எனச் சங்கப்  பதிவகம்  திட்டவட்டமாக  அறிவித்து விட்டது.

நேற்று  மஇகா-வுக்கு  அனுப்பிவைத்த  கடிதத்தில், சங்கப்  பதிவாளரைச்  சந்திக்க  மஇகா  தலைமைச்  செயலாளர்  ஜி.குமார்  அம்மான்  விடுத்திருந்த  கோரிக்கையை  ஆர்ஓஎஸ்  நிராகரித்து  விட்டதாக  தமிழ்  ஊடகங்கள்  கூறியிருந்தன.

“நடப்பு  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  நிலை பற்றிய தகராற்றுக்குத்  தீர்வு  காணப்படாதவரை  புதிய  நியமனங்களை  ஆர்ஓஎஸ்  அங்கீகரிக்காது”, என  அக்கடிதத்தில்  கூறப்பட்டிருந்தது.

கடிதம்  வந்ததை  மஇகா  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியமும்  உறுதிப்படுத்தினார்.