QZ8501:விமானத்தின் நடுப்பகுதியிலிருந்து மேலும் மூன்று சடலங்கள் மீட்பு

bodiesஇந்தோனேசிய  கடல்படை  முக்குளிப்பாளர்கள்  QZ8501  விமானத்தின்  நடுப்பகுதிக்குச்  சென்று மூன்று  சடலங்களை  எடுத்து  வந்தனர்.

கடலில்  நீரோட்டம்  வலுவாக  இருந்ததாலும் வானிலை  மோசமாக  இருந்ததாலும்  விமானத்தின்  நடுப்பகுதியை  அடைவது  சிரமமாக இருந்தது. இன்று  ஒரு  வழியாக அவர்கள்  அப்பகுதியைச்  சென்றடைந்தார்கள்.

“அங்கு  மேலும்  பல  சடலங்கள்  கிடைக்கலாம்”,  என தேடல்  நடவடிக்கை  தலைவர்  சூர்யாடி  சுப்ரியாடி  தெரிவித்தார்.

விமானத்தின்  நடுப்பகுதியை  கடலின்  மேல்பரப்புக்குக்  கொண்டுவரவும்  முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதுவரை அந்த  விமானத்திலிருந்து  56  சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 28-இல்,  இந்தோனேசியாவின்  சுராபாயாவிலிருந்து  162 பேருடன்  சிங்கப்பூர்  நோக்கிப்  பறந்து  கொண்டிருந்தபோது   ஏர்  ஏசியாவின் QZ8501  விமானம்  ஜாவா  கடலில்  விழுந்தது.

இதுவரை  கிடைத்துள்ள தகவலின்படி,  அந்த  விமானம்   மிக  விரைவாக  மேலே  எழும்பியதாகவும்  அதனால்  அதன்  இயந்திரங்கள்  செயலிழந்து  ஜாவா  கடலில்  விழுந்ததாகவும்  இந்தோனேசிய  போக்குவரத்து  அமைச்சர்  இக்னேஷியஸ்  கூறினார்.