ஜாஹிட்: சிருலை மலேசியாவிடம் ஒப்படைக்க முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

formalசிருல்  அஸ்ஹார்  உமரை  ஒப்படைக்கும்படி  ஆஸ்திரேலியாவுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக  உள்துறை  அமைச்சர்  அஹமட் ஜாஹிட்  ஹமிடி கூறினார்.

“அரச  மலேசிய போலீசார்  விஸ்மா  புத்ராவழி  அக்கோரிக்கையை  விடுத்துள்ளனர்”, என ஜாஹிட்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“இதற்கு, ஆஸ்திரேலிய  அரசாங்கத்துடன்  கலந்து  பேசுதல்  போன்று  சில  நடைமுறைகள்  உண்டு.

“ஆஸ்திரேலிய  அதிகாரிகளுடன்  விவாதிக்கும் பொறுப்பு   போலீசிடமும் சட்டத்துறையிடமும்  ஒப்படைக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.

மங்கோலிய  பெண்  அல்டான்துன்யா ஷரிபு  கொலை  வழக்கில்  உச்ச  நீதிமன்றம் சிருலுக்கும்  இன்னொரு  போலீஸ்  அதிரடிப்  படையினரான  அஸிலா  ஹட்ரி-க்கும்  கடந்த  வாரம்   மரண  தண்டனை  விதித்தது. ஆனால்,  சிருல்   அதற்கு  சில  மாதங்களுக்கு  முன்பே  வெளிநாடு  சென்று  விட்டதாக  தெரிகிறது.

அவரை  ஆஸ்திரேலிய  அதிகாரிகள்  கைது  செய்திருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.