எம்பி: 1எம்டிபி ஆனந்தாவிடம் பணம் வாங்குவதா? வெட்கக்கேடு

puaகடன்  தொல்லைகளை  எதிர்நோக்கும் 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) நாட்டின்  இரண்டாவது  மிகப்  பெரிய  பணக்காரரான  ஆனந்தகிருஷ்ணனிடம்  கடன்  வாங்க  முற்பட்டிருப்பது “வெட்கக்கேடான விசயம்”  என எதிரணி  எம்பி  ஒருவர்  கூறினார்.

அந்நிறுவனம் கேய்மென்  தீவிலிருந்து  அதன்  ரிம3.9பில்லியன்  முதலீட்டை  மீட்டுக்கொண்டிருப்பதாகக்  கூறிய பின்னரும்  இந்நிலை ஏற்பட்டுள்ளது  என  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  கூறினார்.

“இது 1எம்டிபி வெட்கப்பட  வேண்டிய  செய்தியாகும்  என்பதுடன்  மலேசிய  அரசாங்கத்தையும்,  அதன்  முதலீட்டு  நிறுவனம்  பட்ட  கடனைத்  தீர்ப்பதற்கு  உள்ளூர்  கோடீஸ்வரரின்  கருணையை  நம்பியிருக்கும்  அளவுக்கு  நிலை தாழ்ந்து   போயிருப்பதை  எண்ணி  சங்கடப்படவைக்கும்  விசயமாகும்”, என்றார்.