ஜொகோவி நிகழ்வில் செய்தி சேகரிக்க மலேசியாகினிக்குத் தடை

passமலேசியாகினி  அதிகாரப்பூர்வமான  நுழைவு  அனுமதியை  வைத்திருந்தபோதிலும், புத்ரா  ஜெயா, பிரதமர்  அலுவலகத்தில்(பிஎம்ஓ)  இந்தோனேசிய  அதிபர்  ஜோகோ  விடோடோ  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சந்திக்கும்  நிகழ்வுக்குச்  சென்று  செய்தி  சேகரிக்க  அனுமதி  மறுக்கப்பட்டது.

மலேசியாகினிக்கு அதிகாரப்பூர்வ  அனுமதி  வழங்கப்பட்டிருந்தாலும்  பிஎம்ஓ  செல்ல  அனுமதிக்க  முடியாது  என்று  பாதுகாப்பு  அதிகாரிகள் அதன்  செய்தியாளரைத்  தடுத்து  நிறுத்தினர். “மேலிட  உத்தரவு”  என்று  சொல்லி  விட்டனர்.

கடந்த   வாரம்தான்  ஜோகோ  வருகை  பற்றிய  செய்தி  சேகரிக்க  தகவல்  அமைச்சிடம்  விண்ணப்பித்து  மலேசியாகினி  அந்த  அனுமதியைப் பெற்றிருந்தது.