சூதாட்ட மன்னன் புவா மொண்டிநெக்ரோ குடிமகனாம்

monteஎவருக்கு  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  உத்தரவாதச்  சான்று  அளித்தாரோ  அந்தச்  சூதாட்ட  மன்னன்  பால்  புவா,  இப்போது  மலேசிய  குடிமகனாக  இருக்க  மாட்டர் போலும்.

மொண்டிநெக்ரோவில்  தொழில்களைக்  கொண்டுள்ள  புவா  பற்றிக்  கிடைத்துள்ள  புதிய  சான்றுகள்  அவர்  அந்நாட்டுக்  குடியுரிமையையும்  பெற்றிருப்பதைக்  காண்பிக்கின்றன.

மலேசிய  அரசமைப்பு  இரட்டைக்  குடியுரிமையை  அனுமதிப்பதில்லை. இன்னொரு  நாட்டின்  குடியுரிமையைப்  பெறும்  ஒருவர் அவரது  மலேசிய  குடியுரிமையை  இயல்பாகவே  இழந்து  விடுவார்.

புவாவுக்கு  2013  அக்டோபருக்கும்  2014  அக்டோபருக்குமிடையில்  மொண்டிநெக்ரோ  குடியுரிமை  வழங்கப்பட்டிருக்கிறது.