ரபிஸி: 1எம்டிபி கடன் சிக்கலால் எம்பேங்க் சிஇஓ பதவி விலகல்

rafiஎம்பேங்க், 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு   ரிம2 பில்லியன் கடன்  கொடுத்ததில்  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதை பேங்க்  நெகாரா  கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது  என  பிகேஆர் தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கூறினார்.

இவ்விவகாரத்தால்  எம்பேங்  தலைமை  செயல் அதிகாரி  அசோக்   ராமமூர்த்தியும்  மேலும்  இரு  உயர்  அதிகாரிகளும்  அண்மையில் பதவி  விலக  நேரிட்டதாக  அவர்  கூறிக்  கொண்டார்.

பேங்க்  நெகாரா, 1எம்டிபிக்கு  எம்பேங்க்  வழங்கிய  கடன்மீது  நடத்திய  கணக்காய்வில்  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதைக்  கண்டுபிடித்ததை  அடுத்து  அந்தப்  பதவி  விலகல்கள்  நடந்துள்ளன  எனத் தமக்குத்  “தகவல் அளித்தவர்”  தெரிவித்ததாக  ரபிஸி  குறிப்பிட்டார்.

“எம்பேங்க்  தலைமைத்துவ  மாற்றம் ஊடகங்களுக்கும்  பொதுமக்களுக்கும்  தெரியாமலேயே  கமுக்கமாக  நடந்துள்ளது”, என்றாரவர்.