1எம்டிபி பற்றி வெளியான தகவல்களின் அடிப்படையில் டிஏபி எம்பிகள் போலீசில் புகார்

mpsகடனில் சிக்கிக்  கொண்டிருக்கும்  அரசாங்கத்தின்  முதலீட்டு  நிறுவனமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  பற்றி சரவாக்  ரிப்போர்ட்டில்  வெளியிடப்பட்ட  ஆவணங்களையும்  மின்னஞ்சல்  தொடர்புகளையும்   அடிப்படையாக  வைத்து போலீஸ் புகார்  செய்யப்பட்டுள்ளது. டிஏபி  எம்பிகள்  கோபிந்த்  சிங்  டியோவும்  டோனி  புவாவும்  அப்புகாரைச்  செய்தனர்.

இந்தப்  புகார்மீது  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல் கனி பட்டேய்ல்  தனிக்  கவனம்  செலுத்த  வேண்டும்  எனவும்  கோபிந்த்  கேட்டுக்கொண்டார்.

அடுத்த  வார  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  இவ்விவகாரத்தை  எழுப்பப்  போவதாகவும்  அவ்விருவரும்  கூறினர்.