கம்போங் கேட்கோ சச்சரவில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

negeriநெகிரி  செம்பிலான்,  பாகாவில், கம்போங்  கேட்கோ  குடியிருப்பாளர்களுடன்  சேர்ந்து  அவர்களின்  பால்மரத்  தோட்டங்கள்  அழிக்கப்படாமல் தடுக்க  முனைந்த  எதிரணி  சட்டமன்ற  உறுபினர்கள்  மூவர்  கைது  செய்யப்பட்டனர்.

டிஏபி-இன்  பாகாவ்  சட்டமன்ற உறுப்பினர்  சியு  செ  யோங்,  செனாவாங்  சட்டமன்ற  உறுப்பினர்  பி.குணசேகரன், பிகேஆரின்  போர்ட்  டிக்சன்  சட்டமன்ற  உறுப்பினர்  எம்.ரவி  ஆகியோரே  அம்மூவருமாவர்.

தம்  சகாக்கள்  கைது  செய்யப்பட்டதை  டிஏபி  இளைஞர்  தலைவரும்  ரசா  எம்பி-யுமான  தியோ  கொக்  சியோங்  உறுதிப்படுத்தினார்.

கம்போங்  கேட்கோவில்  நிலத் தகராறு தொடர்பில்  தங்கள்  ரப்பர்  தோட்டங்கள்  அழிக்கப்படுவதைத்  தடுப்பதற்காக  200-க்கு  மேற்பட்ட  கிராமவாசிகள்   நேற்றிரவே  திரண்டு  விட்டார்கள்.

ஆனால்  காலையில்  100-க்கு  மேற்பட்ட  போலீசாரும்  ரேலா  படையினரும்  அக்கூட்டத்தைக்  கலைத்ததாக ஒரு  கிராமவாசி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“போலீஸ்  சுமார் 30 பேரைக்  கைது  செய்தது”, என  ராம்  பாபு  மலேசியாகினியிடம்  கூறினார்.