அன்வாரின் சிறைத் தண்டனையை எதிர்த்து எம்பிகள் மொட்டை அடித்துக் கொண்டனர்

baldஎதிரணித்  தலைவர்  அன்வார் இப்ராகிம்  சிறையிடப்பட்டதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  15-க்கு  மேற்பட்டோர்  இன்று  நாடாளுமன்றத்துக்கு  முன்  மொட்டை  அடித்துக்  கொண்டனர்.

அவர்களில்  கோட்டா  கினாபாலு  எம்பி  ஜிம்மி  வோங், பாசிர்  பூத்தே  எம்பி  நிக்  மைஸான்  நிக்  முகம்மட்  ஆகியோரும்  உள்ளிட்டிருந்தனர்.

நிக்  மைஸான்,  “குறைபாடுடைய” நீதிமுறைக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கவே  மொட்டை  போட்டுக்  கொண்டதாகக்  கூறினார்.

“அரசாங்கம்  நீதி  காக்கத்  தவறிவிட்டது.  அன்வாருக்கு  அளிக்கப்பட்ட  தீர்ப்பு  தவறு. அது  அரசியல்  நோக்கம்  கொண்டது”, என  அந்த  பாஸ் எம்பி  கூறினார்.

ஜிம்மி,  நாடு  மேன்மையுற  தம் தலைமுடியைத்  தியாகம்  செய்வதாகக்  கூறினார்.

“இந்தப்  பாதி  அன்வாருக்கு  மறுபாதி  சாபாவுக்கு……சாபாவைச்  சட்டவிரோத  குடியேற்றக்காரர்களிடமிருந்து  காப்பாற்றுங்கள்”, என்றவர்  முழக்கமிட்டார்.