கித்தா லவான் பேரணி: மேலும் ஒரு பிகேஆர் தலைவர் கைது

kitaசனிக்கிழமை  நடைபெற்ற  கித்தா  லவான்  பேரணி  தொடர்பில்  பிகேஆர்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ஃபாரிஸ்  மூசா  இன்று  கைது  செய்யப்பட்டார்.

கைது  செய்யப்பட்டதை ஃபாரிஸ்  டிவிட்டரில்    உறுதிப்படுத்தினார். அமைதிப்  பேரணிச்  சட்டம்  மற்றும்  குற்றவியல்  சட்டம்  பகுதி  143-இன்கீழ்  தாம்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக  அவர்  டிவிட்  செய்திருந்தார்.

ஃபாரிஸ்,  கித்தா  லவான்  பேரணி  தொடர்பில்  கைதான  மூன்றாவது  பிகேஆர்  தலைவராவார்.

ஏற்கனவே,  சிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினரும்  பிகேஆர்  இளைஞர்  தலைவருமான  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்டும்  இன்னொரு  பிகேஆர்  இளைஞர்  தலைவரான  சைபுல்லா  சுல்கிப்ளியும்  பேரணிக்கு  ஏற்பாடு  செய்ததற்காகக்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.