சிலாங்கூர் மாநில அரசுதான் நீர் உடன்பாட்டை “முறித்துக்கொண்டது” எனக் கூட்டரசு அரசாங்கம் கூறுகிறது.
இன்று நாடாளூமன்றத்தில் இதனைத் தெரிவித்த எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி, செப்டம்பரில் இரு தரப்பினரும் செய்துகொண்ட உடன்பாட்டின் நிபந்தனைகளை மாநில அரசுதான் நிறைவேற்றவில்லை என்றார்.
“எங்களைப் பொறுத்தவரை, உடன்பாட்டை நீட்டிப்பதில்லை என்று மாநில அரசு முடிவு செய்யும்வரை எல்லாமே ஒழுங்காகத்தான் சென்று கொண்டிருந்தது”, என்றாரவர்.
மாநில அரசின் முடிவால் அண்மைய எதிர்காலத்தில் சிலாங்கூர், புத்ரா ஜெயா, கோலாலும்பூர் ஆகியவை நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கலாம் என்று அமைச்சர் எச்சரித்தார்.
தண்ணீர் பற்றாக்குறையால் சிலாங்கூர் மாநிலத்தில் பல கோடி முதலீடுகள் நின்றுபோனதாம். சுமார் 700 தொழில் பேட்டைகளை மூடி விட்டார்களாம். பைப்புகள் ஓடும் நிலத்தையும் நடுவண் அரசு கேர்ப்ப்தால் சிலாங்கூர் மாநிலம் தகராறு செய்கிறதாம். தண்ணீர் நிறுவன் சொத்துக்களில் பைப் ஓடும் நிலங்களும் அடங்கும். ASSET இந்த நிலங்களை சிலாங்கூர் மாநிலம் தர மறுப்பதால் பைபை எங்கே நடுவது என்று ஓங்க்கிலி கேற்க சிலாங்கூர் மாநில மந்தேறி புசார் “உனக்கு என்னதான் வேண்டும் “என்று ஒங்கிலி அவர்களை கேட்டார்
தண்ணீர் பைப்பை பூட்ட நிலம் வேண்டும். இது சிலாங்கூர் மாநில சொத்து என்கிறார் அஸ்மின். மக்கள் யார் சொத்து ? நீர் யார் சொத்து என்றெலாம் வியாபாரம் பண்ணாதான் இவர்கள் நாடாளுமன்றத்தில் மேய்கிறார்கள். இதற்கிடையில் தஞ்சோங் கராங் MP முன்னாள் சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் மழைத தண்ணீர், லோம்போங் தண்ணி போக இப்போது பென்ஜாராவில் ஒரு தண்ணி எல்லாம் இருக்கு என்றதும் அவையில் பாகாதான் கட்சியினர் சத்தம் போட்டனர்.
முன்னாள் MB தண்ணீர் விசியமாக 32 கூட்டம் போட்டாராம். அஸ்மின் சொல்ல. அஸ்மின் எத்தனை கூட்டம் போட்டாய் என்று கேட்டார். கடந்த ஆறு மாதங்களாக புதிய MB என்ன சாதித்தார் என்றும் கேள்வி எழும்பியது? மாநிலத்தில் இருக்கும் தண்ணீர் வதிப்போனாலும் இவர்கள் விவாதம் வாடாது வதங்காது வீங்கும் என்பது மட்டும் தின்னம.
நீர் தட்டுப்பாட்டை உங்களால் நிச்சயம் உருவாக்க முடியும்! அதனை சிலாங்கூர் எப்படி கையாளும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். சிலாங்கூரின் ஆயுதம் எப்படி இருக்கும், பார்ப்போம்!