1எம்டிபி ஆனந்தாவிடம் கடன் வாங்கவில்லை

fin1மலேசியா  மேம்பாட்டு நிறுவனம்   அதன்  கடன்களைத்  தீர்ப்பதற்கு  ஆனந்தகிருஷ்ணனிடம்  பணம்  கடன்  வாங்கவில்லை  என  நிதி  அமைச்சு  கூறியது.

அது  கடன்  வாங்கியதாகக்  கூறப்படுவது  பற்றி  தியான்  சுவா  கேட்டிருந்த  கேள்விக்கு  நிதி  அமைச்சு  எழுத்துப்பூர்வமாக  இந்தப்  பதிலை  அளித்தது.

“1எம்டிபி  கோடீஸ்வரர்  ஆனந்தகிருஷ்ணனிடம்  கடன்  வாங்கியதாகக்  கூறப்படுவது  உண்மையல்ல”, என  நிதி  அமைச்சு  கூறிற்று.

1எம்டிபி  கேய்மன்  தீவில்  போட்டு வைத்திருந்த  யுஎஸ்$2.318 பில்லியனை  மீட்டுக்  கொண்டிருப்பதாகவும்  அதைக்  கொண்டு  அது  தன்  கடனைத்  திருப்பிச்  செலுத்தியதாகவும்  அமைச்சு  தெரிவித்தது.