கித்தா லவான் பேரணி தொடர்பில் டிஏபி இளைஞர் தலைவர் கைது

remandகடந்த  சனிக்கிழமை  நடைபெற்ற  கித்தா  லவான்  பேரணிக்கு  எதிராக  போலீஸ் மேற்கொண்டுள்ள  நடவடிக்கையில் டிஏபி  இளைஞர்  தலைவர்  தியோ  கொக்  செங்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.

சிறை  வைக்கப்பட்டுள்ள  எதிரணித் தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  அப்பேரணி  தொடர்பில்  வாக்குமூலம் பதிவு  செய்ய  தியோ  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையத்துக்கு  அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு  சென்ற  தியோ  தடுத்து  வைக்கப்பட்டதாக  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்   டிவிட்டரில்  தெரிவித்திருந்தார்.

“போலீஸ்  நடவடிக்கை  தொடர்கிறது- கித்தா  லவான்  பேரணி  தொடர்பில்  கைது  செய்யப்பட்ட  ஆறாவது  ஆள்  டிஏபி  இளைஞர்  தலைவர்  தியோ  கொக்  சியோங்”, என்றவர்  டிவிட்  செய்திருந்தார்.

வாக்குமூலம்  பதிவுசெய்ய  தியோவை  அழைத்ததை  போலீசும் உறுதிப்படுத்தியது. ஆனால், அவர்  தடுத்து  வைக்கப்படுவாரா  என்பது  “விசாரணையைப்  பொறுத்தது”  என்று  அது  கூறிற்று.