நுருல் நுஹா: அன்வாரின் உடல்நிலை கவலையளிக்கிறது

healthசுங்கை  பூலோவில்  சிறை  வைக்கப்பட்டுள்ள  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  உடல்நிலை  மோசமடைந்துள்ளதாம்.

அன்வாரின்  இரத்த  அழுத்தம் 87/50 ஆக  உள்ளது  என  அவரின்  இரண்டாவது  மகளான  நுருல்  நுஹா  அன்வார்  கூறினார்.

ஒரு  மாதத்தில்  தம்  தந்தை  3கிலோ கிராம்  எடை  குறைந்திருப்பதாக அவர்  சொன்னார்.

“அவரது  உடல்நிலை குறித்து  நாங்கள்  மிகவும்  கவலை  கொண்டிருக்கிறோம்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அவருக்கு சத்துணவுகள், வைட்டமின்கள்  போன்றவை  கிடைப்பதில்லை”, என்றாரவர். அன்வார்  “சூடான, புழுக்கம்  மிகுந்த” இடத்தில்  வைக்கப்பட்டிருப்பதாக  அவர் வருத்தப்பட்டார்.

இவ்விவகாரங்களை  அவரின்  குடும்பத்தார்  சிறையின்  மருத்துவ  வாரியத்  தலைவரின்  கவனத்துக்குக்  கொண்டு  செல்லப்போவதாகவும்  அவர்  தெரிவித்தார்.