நூருல் இஸ்ஸா விடுவிக்கப்பட்டார், ஆனால்……

lembahநேற்றிரவு  போலீஸ்  நிலையத்தில்  தடுத்து  வைக்கப்பட்ட  லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல்  இஸ்ஸா  அன்வார், போலீஸ்  பிணையில்  விடுவிக்கப்பட்டார்.

ஆனாலும், ஏப்ரல்  16-இல், அவர்  மறுபடியும்  போலீஸ்  நிலையத்தில்  முன்னிலை  ஆக  வேண்டும்.

விடுவிக்கப்பட்ட  பின்னர்  நூருல்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

“நான்  கைது  செய்யப்பட்டது  ஐஜிபி, பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஆகியோரின் அப்பட்டமான  அதிகாரமீறல்  என்பது  தெளிவு.

“நாடாளுமன்றத்துக்கு  எதிராக அத்துமீறல்  நடந்திருப்பதற்குப்  பிரதமரே  பொறுப்பு”, என்றாரவர்.