கிளந்தான் சட்டமன்றத்தில் கிளந்தான் ஷியாரியா குற்றவியல் சட்டத் திருத்த சட்டவரைவு தாக்கல் செய்யப்படும் வேளையில் கெராக்கான் கட்சி அதைச் சட்ட ரீதியாக எதிர்க்க முனைந்திருக்கிறது.
அச்சட்டவரைவை அரசமைப்புக்கு விரோதமானது என அறிவிக்குமாறு கோரும் மனு ஒன்றை அக்கட்சியின் வழக்குரைஞர் குழு கோட்டா பாரு உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டான் கெங் லியாங் கூறினார்.
“கூட்டரசு அரசமைப்பில் மலேசியாவில் ஹுடுட் சட்ட அமலாக்கத்துக்கு இடமளிக்கும் சட்டவிதி எதுவும் இல்லை என நம்புகிறோம். மலேசியா உருவாக்கப்பட்டபோதும் அதற்கு ஒப்புக்கொள்ளப்படவில்லை”, என்றாரவர்.
ஹுடுட் சட்டவரைவைத் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க முடியாத டிஏபி-இன் லிம் கிட் சியாங்கும் அவரின் மகன் குவான் எங்கும் பதவி விலக வேண்டும் என்றும் டான் கோரிக்கை விடுத்தார்.
அட வெங்காயங்களா. இது அரசியல் வழி தீர்வு காண வேண்டிய பிரச்சனை. மக்கள் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டிய பிரச்சனை. கண் கட்டி வித்தை காட்டும் நீதிமன்றத்திற்குப் போனீர்களானால் கோவிந்தா! கோவிந்தா!.