ஏப்ரல் முதல் தேதியிலிருந்து டெக்சி, பேருந்து கட்டணங்கள் உயரும்.
தொடக்கக் கட்டணம் ரிம3 என்பதில் மாற்றமில்லை என்றாலும் இப்போது ஒவ்வொரு 115 மீட்டருக்கும் 10 சென் என்றிருப்பது ஒவ்வொரு 200 மீட்டருக்கும் 25 சென்னாக திருத்தி அமைக்கப்படுகிறது.
மிட் வேலியிலிருந்து சன்வே பிரமிட் செல்வதாக வைத்துக் கொண்டால் அந்த 11.6 கிலோ மீட்டர் பயணத்துக்கு இப்போது கொடுக்கும் கட்டணம் ரிம12.20. இது இனி, ரிம16.25 ஆகும். அதாவது 33 விழுக்காடு கூடுகிறது.
விரைவு பேருந்துகளின் கட்டணம் நடப்பில் கிலோ மீட்டருக்கு 9.3 சென்னாக இருப்பது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 11.4 சென்னாக உயரும். அதாவது 22.6 விழுக்காடு உயர்கிறது.
கோலாலும்பூரிலிருந்து ஈப்போ செல்லும் பயணிகள் முன்பு ரிம20.60 சென் கொடுத்த இடத்தில் இனி ரிம25.30 கொடுக்க வேண்டி வரும்.

























மக்களின் சுமையை குறைக்கும் என்று நம்பி BN-க்கு ஒட்டு போட்ட மக்களுக்கு, BN அரசாங்கம் கொடுத்த மற்றொரு “செருப்படி” என்றால் மிகையாகாது.
இனிமேதான் கூத்தெ இருக்கு. கி எஸ் தி வந்த பின் இது போன்ற பொது வாகனங்கள் கட்டணம் குறைய வேண்டும். ஆனால்….
நேற்று (19-03-2015) நண்பன் பத்திரிகையில் இந்த G.S.T. பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதன் ஆசிரியர் G.S.T. என்றால் என்ன அது எப்படி அமல்படுத்தப்படும் என்கிற அடிப்படை அறிவே இல்லாமல் கட்டுரையை எழுதி இருக்கிறார். இந்தக் கட்டுரையை பலரிடம் காட்டினேன். சிலரிடம் படித்தும் காட்டினேன். யாருக்கும் எதுவும் புரியவில்லை. கட்டிரையை எழுதியவரும் குழம்பிப்போய் படிப்பவர்களையும் ரொம்ப தெளிவாகவே குழப்பியிருக்கிறார். அவரின் ஒரே நோக்கம் வழக்கம் போலவே அரசாங்கத்தின் இந்த நோக்கத்தையும் குறை சொல்லக்கூடாது என்பதுதான். % விழுக்காட்டுப் பொருட்களுக்கு வழக்கமான 10% – 12% விழுக்காட்டு விறபனை வரியுடன் இந்த G.S.T. யும் இணைத்துக் கொள்ளப்படும் என்பதுதான் உண்மை. எனவே நாட்டு மக்கள் அனைவரும் கடன்காரர்களாக வேண்டியதுதான்.
மேலும் G.S.T. குறையும் என்றால் ஏன் இந்த டாக்சி, விரைவுப் பேருந்து கட்டண உயர்வு? இன்றைய நிலையில் அதிகமாக சம்பாதிப்பவர்களில் இந்த டாக்சியோட்டிகளும் அடங்குவர். எந்த டாக்சியோட்டியும் (எல்லா செலவும் போக) நாளொன்றுக்கு ரி.ம.150.00க்கு குறையாமல் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. ரி.ம. 6.00 எரிவாயுவில் ரி.ம.90.00க்கும் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
நாட்டு மக்கள் ஒன்றாக இணைந்து அந்நிய தொழிலாளர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் இங்குள்ளவர்களுக்கு முறையான வேலை வாய்ப்பும் சம்பளமும் கிடைக்கும். ஒன்றுக்கும் அதிகமான வேலையும் நாம் செய்ய முடியும். என்னுடைய இந்த கருத்துக்கு பல கண்டனங்கள் எழும் என்று எதிர்பார்த்தே இதை எழுதுகிறேன். அப்படி கண்டனங்கள் வந்தால் அனைத்துக்கும் தக்க பதில் விளக்கம் கொடுக்கவும் நான் தயார்…!
எண்ணெய் விலை பொது வாகனங்களின் செலவினங்களில் 11% – 13% மட்டுமே வகிக்கின்றது என்று இதற்கு முன்பு SPAD விளக்கமளித்தது. இப்பொழுது GST வரி அறிமுகத்தால் இந்த வாகனங்களின் முக்கிய செலவினமாக கருதப்படும் Tyre விலை குறைக்கப் படும் என்று இதற்கு முன்பாகவே செய்திகள் வெளியாயின. அதற்குள் வாடகை வண்டி, பேருந்து, இரயில் வாடகையை ஏற்றுவதற்கு அனுமதி கொடுத்தது எதனால்?. இரயில் சேவையில் இதுவரை செலவினங்கள் ஏறியதற்கு என்ன ஆதாரம் கொடுக்கப் பட்டது?. தே.மு. அரசாங்கத்திற்கு ஆதவளித்த 49% மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். ஏழைகள் வயிற்றில் அடித்த எந்த அரசாங்கமும் நிலைத்து நின்றதாக வரலாறு இல்லை. இந்த அரசாங்கமும் நிலைத்து நிற்கப் போவதாக தெரியவில்லை.
நேற்று முதல் மேலே குறிப்பிடப்பட்ட புதிய பேருந்து கட்டணத்தை அமல் படுத்தி விட்டோம். குறிப்பாக, வெளிநாட்டு சுற்று பயணிகளிடம்
புதிய பேருந்து கட்டணத்தோடு GST வரி 6% சேர்த்து வசூலிக்கிறோம். இனிமேல் எங்களை போன்ற டெக்சி/பேருந்து ஓட்டுனருக்கு வசந்த காலம்தான்.
நமது உடன்பிரப்பு அதிகமனேர் குறைந்த வருமானம் பெருகிறர்கள் 1) ஜி எஸ் தி , 2, வாழ்க்கை செலவு 3, பொது வாகனங்கள் கட்டணம் உயர்வு , ஒன்று தெரிகிறது அரசாங்கம் கொண்டாட்டம் நமது உடன்பிரப்புகள் , திண்டாட்டாம்
Anonymous !
அரசாங்கம் நிர்ணயித்த தேதிவரை காத்திராமல் உடனே புதிய பேருந்து கட்டணம் + GST 6% என்று வசூலிக்க தொடங்கிய உங்களுடைய கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ?
பிள்ளயைக் (SPAD) கிள்ளி விட்டு விட்டார். விரைவில் தொட்டிலை ஆட்டி (SPAD செய்த கட்டண உயர்வை குறைக்கிறேன்) என்று தலையிட்டு கொஞ்சமாகக் குறைத்து நல்ல பேர் வாங்க வருவார் நம்ம நம்பிக்கை நாயகன். என்னாமா நடிக்கறாங்கப்பா…அமைச்சரவைக்குத் தெரிவிக்காமல், அமைச்சரவை ஒப்புதல் பெறாமல் SPAD. தன்னிச்சையாக இந்த கட்டண உயர்வை செய்ததாக நம்ம மந்திகள் யாரவது சொல்வார்களா? கேழ்வரகிலே பெற்றோல் வருதுன்னா அத நம்ப நாம என்னா கேணப்பயல்களா?