பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்க மறைமுக முயற்சிகள் நடப்பதாக ஊகங்கள் பெருகிவரும் வேளையில் பிஎன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.
“பங்காளிக் கட்சித் தலைவர்களான நாங்கள் நஜிப்பின் தலைமைத்துவத்துக்கு எங்களின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் பிஎன்னை வழிநடத்துவதற்கும் நாட்டின் உருமாற்றத்துக்கும் என்றென்றும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”, என மசீச தலைவர் லியோ தியோங் லாய் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அவருடன் சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேம், மஇகா தலைவர் ஜி.பழனிவேல், பிபிபி தலைவர் எம். கேவியெஸ் , கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் முதலான தலைவர்கள் காணப்பட்டனர்.
நஜிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது பிஎன் கட்சிகள் சேர்ந்து எடுத்த ஒரு பிளவுபடாத முடிவு என பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்து தலைவரான அடினான் கூறினார்.
அது தீவகற்ப மலேசியாவையும் சாபா, சரவாக்கையும் சேர்ந்த பங்காளிக் கட்சிகளின் ஒருமித்த முடிவு என்றாரவர்.


























எப்போதும் உறுதுணையாக இருப்போம்: பிரதமரிடம் பிஎன் தலைவர்கள் வலியுறுத்து // ஆமாம் தொடர்ந்து கொள்ளை அடிக்கதானே !
அப்படித்தான் ம.இ.கா. மன்னாதி மன்னர்களும் தலைவர்களுக்கு விசுவாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லி வையுங்கள்!
ஆமாம் இன்னும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து தின்று ஏப்பம் விட கண்டிப்பாக உறுதுணையாக இருக்க வேண்டும் .
அவர் இருக்கும் வரை அவருக்கு ஆதரவு கொடுத்துதானே ஆகணும்…இல்லேன்னா என்ன ஆகும்னு தெர்ர்ர்ர்ர்ர்யும் இல்லே…ஆதரவு இல்லேன்னு சொல்ல எவனுக்காவது ‘தில்’ இருக்கணுமே…யார் ஆதரவு கொடுக்கலேன்னாலும் இருக்கே இருக்கு நம்ம மாங்கா கட்சி..”SOKONG. TUAN”
அம்னோ அடித்தளம் ஆடிப்போய் இருக்கின்றது என்று இவர்களின் செய்தி அறிக்கை அம்பலமாக்கி இருக்கின்றது. இது கிளாந்தான் அம்னோ, பாஸ் கட்சியின் சட்ட நகல் தீர்மானத்திற்கு ஒத்து ஊதியதில் இருந்து நன்றாகத் தெரிகின்றது. அன்றே ஹுடுட் சட்டத்தை எதிர்த்த மாமக்தீரின் வாயை அடைக்க நம்பிக்கை நாயகன் ஆடும் நாடகம் இது. இந்நாடகத்தின் முடிவு முன் கூட்டியே தெரிந்து விட்டதால் அம்னோ பாஸ் கூட்டணி என்ற நாடகத்தின் அரங்கேற்றம் பச்சோந்திகளின் நடிப்பு என்பதும் வெட்ட வெளிச்சமாயிற்று. அந்த பச்சோந்திகளின் நடிப்புக்கு இந்த வருபோகிகள் ஆதரவு தெரிவிப்பதில் இருந்து இதுவும் அந்த பச்சோந்திகளுக்குச் சோடை போகாதவர்கள் என்று நிரூபணமாகின்றது.
கொள்ளை அடிக்கும் கும்பல் மறு உறுதி எடுத்துள்ளனர்- வேறு என்ன?
என்னத்தை சொல்ல மாணம் கெட்ட ஜென்மங்கள் .
பங்காளி கட்சிக:ளை சேர்ந்தவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் பின் அப்துல்லா என்று எழுதச் சொன்னால் கூட அவர்கள் எழுதுவதற்கு தயாரக இருப்பார்கள். காரணம் மக்கள் வரியை சுருட்ட சுலபமாக இருக்கும் அல்லவா?. அரசியல்வாதிகளுக்கும், அவர்களைச் சாந்தவர்களுக்கும் கொடுக்கப் பட்ட “கடன்களை” வசூலித்தாலே GST தேவையில்லை. இந்த நிலையில் நம்பிக்கை நாயகன் தேன் நிலவுக்கு செல்ல தனது 465 மில்லியன் 7வது புதிய விமானதிற்கு காத்திருப்பது, எந்த அளவுக்கு நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.தேசிய முன்ணனி தொடர்ந்து கொள்ளையடிக்க ஜி.எஸ்.டி.யும் வழி வகுக்கும்.
மேலே உள்ள படத்திற்கு பதிலாக, நஜிப் கைலி அணிந்திருப்பது போலவும், பங்காளி கட்சிகளான மசீச, மஇகா, பிபிபி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நஜிபுக்கு ஆதரவு தரும் மற்ற கட்சி தலைவர்கள், நஜிப் கைலிக்குள் நுழைந்து ஆதரவு தெரிவிப்பதுபோல் கேலி சித்திரத்தை வெளியிட்டு இருந்தால் இந்த தலைப்புக்கு சிறப்பாக இருந்திருக்கும்.
ஆதரவு கொடுக்கலேன பதவிக்கு ஆப்பு.சுருட்டின பணத்டிட்கு காப்பு.
மீண்டும் ஒரு அலி பாபாவும் 40 திருடர்களும் !!!!!!!! 2015 ம் ஆண்டு நம் நாட்டு வெள்ளி திரையில் …. காண தவதாதீர் !!!!!!!!!
ஆமாம் ஆமாம், இல்லை என்றால் கிடைக்கிற கொஞ்ச நஞ்ச பிச்சையும் கிடைக்காமல் போய்விடும். மண்டையை நல்லா ஆட்டுங்கள்.