பொருள், சேவை வரி தொடர்பில் 106 கேள்விகளுக்கு விடை கோரி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கூட்டரசுப் பிரதேச சுங்கத் துறை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமைதாங்கிய எஸ். அருட்செல்வனும் கைதானவர்களில் ஒருவர்.
“கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்வரை இரவையும் இங்கேயே கழிக்கத் தயார்”, என்று அருட்செல்வன் முன்னதாக மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.
அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சுங்கத் துறை வளாகத்தில் உள்ள ஜிஎஸ்டி தகவல் மையத்துக்கு அருகில் காலையிலிருந்து உள்ளமர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைக் கலகத் தடுப்புப் போலீசார் கண்காணித்து வந்தனர்.
அக்கூட்டத்தில் பாஸ் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட், பிஎஸ்எம் தலைவர் முகம்மட் நசிர் ஹஷிம், தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட், கோலா கிராய் எம்பி முகம்மட் ஹட்டா ரம்லி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் போன்றோர் காணப்பட்டனர்.


























GST இன்னும் அமல் படுத்தப்படவில்லை ,ஆனால் Astro பெப்ருவரி மாத பில்லில் 6%அரசாங்க வரியை விதித்துவிட்டது, அரசாங்கம் ,Astro மீது நடவடிக்கை எடுக்குமா?
நாளிதழ்களில் நாளை யாருடைய மரணம தலைப்பு செய்தியாக போகிறதோ ?
மலேசியாவில் ” சிறை சென்றால் சாவுதான்” என்பதை மறுபடியும் நிரூபிக்க போகிறார்கள்.
நாட்டை ஒரு வழிக்கு கொண்ட்டுவந்துவிட்டார் பிரதமர் ,,,,இதில் பாதிப்பு சீனர்களுக்கு அதிகம் ,,,ஏன் தமிழர்கள் கொந்தளிப்பு,,,,முறுக்கு அச்சுமுறுக்கு வியாபாரத்தையும் சீனன்,,மலாய்காரர்கள் கொடுதுவிடார்கள் நாம் இனிமேல் வியாபாரம் செய்ய வாஇப்புஇல்லை இனிமேலாவுது சிறு வியாபாரத்தை செய்ய தொடங்குகள் ,,,