ஜிஎஸ்டி ஆர்ப்பாட்டத்தில் நான்கு எம்பிகளுக்குக் காயம்; இருவர் கைது

kelanaநேற்று கிளானா  ஜெயா  சுங்கத்  துறை வளாகத்தில் ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் 80-பேர்  கைது  செய்யப்பட்ட  சம்பவத்தின்போது  தங்கள்  சகாக்கள்  சிலர்  நடத்தப்பட்ட   விதத்துக்கு  பக்கத்தான் ரக்யாட்  எம்பிகள்  கண்டனம்  தெரிவித்துக்  கொண்டனர்.

இரு எம்பிகள்- பிஎஸ்எம்-இன்  சுங்கை  சிப்புட்  எம்பி  டாக்டர்  மைக்கல்  ஜெயகுமார், பாஸ்  கோலா  கிராய்  எம்பி  டாக்டர்  ஹட்டா ரம்லி-  ஷா  ஆலம் மாவட்ட  போலீஸ்  தலைமையகத்தில்  தடுத்து  வைக்கப்பட்டனர்.

டிஏபியைச்  சேர்ந்த   நான்கு  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்- லானாங்  எம்பி  அலிஸ்  லாவ்,  ஸ்தம்பின்  எம்பி  ஜூலியன்  டான்,  புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி  ஸ்டீபன் சிம்,  கிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகு- போலீசாருடன்  நிகழ்ந்த  தள்ளுமுள்ளுவில்  காயமடைந்ததாகக்  கூறப்படுகிறது.

சார்ல்ஸ்  இப்போது  மருத்துவ  சிகிச்சை  பெற்றுக்  கொண்டிருக்கிறார். லாவ்  மருத்துவமனை  செல்ல  வேண்டும்  என்ற மருத்துவர்களின்  ஆலோசனையைப்  புறக்கணித்து  விட்டு  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  கலந்து  கொண்டிருக்கிறார்.