பிரதமர்: தேச நிந்தனைச் சட்டத்துக்காக ‘வருத்தப்பட வேண்டியதில்லை’

actபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1948  தேச  நிந்தனைச்  சட்டம்  தொடர்ந்து   பயன்படுத்தப்படுவதை  இன்று  தற்காத்துப்  பேசினார். இதே  சட்டத்தைத்தான் 2012-இல்  எடுத்தெறியப்  போவதாக  அவர்  கூறினார். பிறகு  கடந்த  ஆண்டில்  முடிவை  மாற்றிக்  கொண்டார்.

இன்று,  கோலாலும்பூரில்  208-வது  போலீஸ்  தினக்  கொண்டாட்டத்தில்  உரையாற்றிய  நஜிப்,  அச்சட்டத்தைத்  தொடர்ந்து  பயன்படுத்துவது  பற்றி  அதிகாரிகள்  வருத்தப்பட  வேண்டியதில்லை  என்றார்.

“சிலர்  இது  ஜனநாயகத்துக்கு  ஏற்புடையதல்ல  என்பார்கள்.

“நான்  சொல்கிறேன்,  அப்பட்டமான  சுதந்திரம்  என்பதே  கிடையாது; நாட்டுக்கு  செய்ய  வேண்டிய  கடமை  என்ற  ஒன்றிருக்கிறது. அதன்றி  அப்பட்டமான  சுதந்திரம்  என்பதே  இல்லை”, என்றாரவர்.

அச்சட்டம்  இனங்களுக்கிடையில்  நல்லுறவுகளை  உறுதிப்படுத்தத்  தேவைப்படுகிறது  என்பதை  வலியுறுத்திய  நஜிப்,  அதுவும்  விரைவில்  அறிமுகம்  காணவிருக்கும்  பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டமும்  விரும்பத்தகாத  சம்பவங்கள்  நடப்பதைத்  தடுப்பதற்கு  தேவைப்படுவதாகக்  கூறினார்.

இப்படிப்பட்ட  தடுப்புச்  சட்டங்கள்  தீவிர  வன்முறைகளைத்  தடுத்து  நிறுத்த  உதவும்  எனப்  பிரதமர்  குறிப்பிட்டார்.