பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தொடுத்துள்ள தாக்குதல் பற்றி அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினிடம் கருத்துக் கேட்கப்பட்டதற்கு அவர் இரு தரப்புக்கும் நல்ல பிள்ளைபோல் நடந்து கொண்டார்.
மக்களிடம் மகாதிருக்கு அளவற்ற செல்வாக்கு இருப்பதால் அவர் வலைப்பதிவில் எழுதியதைப் புறந்தள்ளிவிட முடியாது என்று கைரி கூறினார்.
அதனால், அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அவை ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட கேள்விகளாக இருந்தாலும் நஜிப் பதில் சொல்லத்தான் வேண்டும்.
“மகாதிர் எழுதியவற்றுக்குப் பதில் கூறத்தான் வேண்டும். நெருப்புக் கோழிபோல் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு பிரச்னை போய்விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அது சரியல்ல”, என்றாரவர்.
அதே வேளை அம்னோ இளைஞர் பிரிவு அமைச்சரவை ஆகியவற்றின் ஆதரவு நஜிப்புக்கே என்பதையும் கைரி வலியுறுத்தினார்.
“பிரதமர் என்ற முறையிலும் அம்னோ தலைவர் என்ற முறையிலும் நஜிப்பின் தலைமைத்துவத்தின்மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.


























இவன் கழுவுற மீனில் நழுவுற மீன்.மதி மேல் பூனையாக அவன் கருத்து அமைந்துள்ளது.
விலாங்கு, மீனுக்கு தலையும், பாம்புக்கு வாலையும் காட்டுவது இதுதானோ ?
அரசியலில் இது சகஜம் .அதிகநாள் பதவியில் இருக்க வேண்டும் என்றால் இப்படித்தான் தப்பித்துகொள்ள வேண்டும் ..நமது தாய் கட்சியுலும் இப்படித்தானே ……
உலக ஜிம்னாஸ்டிக் இளஞர் தலைவர் பச்சோந்தி ..
ஆமாம் கைரி உத்தரவு போட்டுடாரு ,நஜிப் அப்படியே உண்மையை கக்கிடுவாறு!
இவன், மிகப்பெரிய தந்திரசாலி, ஹிண்ட்ராப் சம்பவம் குறித்து அம்னோ மாநாட்டில் மிகவும் தரக்குறைவாக நம்மை விமர்சித்து பேசியவன், தேர்தல் பிரச்சாரத்தில் அப்படியே அந்தர் பல்டி அடித்து, நான் எங்கே அப்படி பேசினேன் என்று ஜகா வாங்கியவன். (இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் இவன் இனிக்கப்பேசி தன் காரியம் சாதிக்கும் திறமை கொன்டவன் , இவனுக்கும் இந்தியர்களை ஏமாற்றும் ஏனைய “அரசியல்வியாதி”களுக்கும் அதிகம் வித்தியாசம் எல்லை என்பதை நாம் அறிந்துகொள்ளத்தான்)
ஒரு அரசியல் வாதிபோல் நடந்துகொள்கிறார் இவர்.ஆனால் மக்கள் ஏமாளியல்ல.
கொ(ள்)ளையிலே ஆரம்பிச்சு கொலையிலே முடிச்ச “கொள்கொல்” எஜமானே என்று நஜிப்பை பார்த்து எதிர்காலத்தில் கைரி பாட வேண்டி வரலாம்.
மகாதீரின் குற்றச் சாட்டுகளுக்கு நஜிப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் அது உண்மை என்றுதான் ஒப்புக் கொள்ள வேண்டும்..?