முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எழுப்பும் விவகாரங்களை எதிர்க்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மளவில் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிஎன் ஆதரவு மன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அம்மன்றத்தின் தலைவரும் ஜோகூர் பாரு எம்பியுமான ஷாரிர் சமட், பிஎன் எம்பிகள் நஜிப்பை ஆதரிக்கிறார்கள், தற்காத்துப் பேசுகிறார்கள் ஆனால் அவர் தம்மைத் தற்காத்துக் கொள்ளுவதே சிறப்பாக இருக்கும் என்றார்.
“இதைப் பற்றி பிரதமரிடம் பேசியிருக்கிறோம். எங்களால் முடிந்த மட்டும் அரசாங்க ஜெட் விமானக் கொள்முதல், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம், பொருள், சேவை வரி போன்றவை பற்றிப் பேசுவோம்.
“இவற்றுக்கு எங்களால் விளக்கம் கூற முடியும். அதே நேரத்தில் சரியான நேரத்தில் அவரும் இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி இருக்கிறோம். இது அவருக்கு ஒரு பிரச்னையாக இருக்காது என்றே நினைக்கிறேன்”, என ஷாரிர் செய்தியாளர்களிடம் கூறினார்.


























நல்லா இருக்கு உங்கள் அறிக்கை. நம்ப நாட்டு பிரதம மந்திரி என்ன மந்திரித்து விட்ட கோழியா?. பேசா மடந்தையாக இருக்க!. அவருக்கு அறிவுரை சொல்லப் போயி நீங்களே பிரதம மந்திரியாகி விடுங்கள் என்று உங்களை பிஎன் ஆதரவு மன்றம் கேட்டுக்கொண்டது என்று மீண்டும் அறிக்கை விடாமல் இருந்தால் சரி. இந்த நாட்டுல என்னா நடக்குதுன்னே புரிஞ்சிக்கவே முடியலப்பா!.
ஜிங் ஜக் … அடிக்கும் கூட்டம் இருக்கும் வரை நாடு உறுபடாது!!!!!!!!
ஐயா! நீங்கள் சொல்வது போல, 1MDB, GST, ஜெட் விமான கொள்முதல் போன்ற விஷயங்களை உங்கள் திறமையால் வித்தை காட்டி விடுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். C4 வெடிகுண்டு வைத்து அல்தாந்துயாவை தகர்க்க, சிருளை பயன்படுத்தியது யார், என மகாதிமிர் கேட்டால், என்ன சொல்லப் போகிறீர்கள்?
நஜிப் மகாதிரை எதிர்த்து நிற்க வேண்டும் ,அதுதான் சரி ,அப்படியே மகாதிர் BN னுக்கும் ஆப்பு வைக்க வேண்டும்
புலி பதுங்குவது பாய்ந்து தன் காரியத்தை சாதிக்க இந்த புலி சாதிக்குமா ??இல்லை வீழ்ந்து தன் பல்லை உடைத்து கொல்லுமா பொறுத்திருந்து பார்போம்???????